லைஃப்ஸ்டைல்

ஆஹா ! பேரீச்சம் பழத்தை வைத்து இப்படியும் செய்யலாமா? ரொம்ப சூப்பரா இருக்கும்போலயே!

Published by
K Palaniammal

பேரிச்சம் பழத்தில் நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. அதை நாம் பொதுவாக பாலில் ஊற வைத்து அல்லது தேனில் ஊற வைத்தோ சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று பேரிச்சம் பழத்தை வைத்து பச்சடி எப்படி செய்வது என்று காண்போம்.

தேவையான பொருள்கள்:
பேரிச்சம்பழம்=1/4கிலோ
நல்லெண்ணெய்=200 ml
கடுகு= ஒரு ஸ்பூன்
வெந்தயம்= ஒரு ஸ்பூன்
மிளகு =ஒரு ஸ்பூன்
தக்காளி =இரண்டு
பெரிய வெங்காயம்= இரண்டு
மிளகாய் பொடி=1 ஸ்பூன்
கரம் மசாலா= ஒரு ஸ்பூன்
மல்லித்தூள்= அரை ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட்= ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய்= இரண்டு
நாட்டு சக்கரை= 3 ஸ்பூன்

செய்முறை:ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு ,வெந்தயம் மிளகு சேர்த்து தாளிக்கவும். அதனுடன் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் வதங்கிய  பிறகு இஞ்சி பூண்டு பேஸ்டையும் சேர்க்கவும் அதனுடன் மிளகாய் தூள் சிறிதளவு உப்பு சேர்த்து கூடவே கொட்டை நீக்கி ஊறவைத்த பேரிச்சம் பழத்தை மசிந்து அதில் சேர்த்து வதக்கவும். பிறகு அதிலே கரம் மசாலா மல்லித்தூள் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்த  பிறகு கடைசியாக புளியை சேர்த்து நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து கிளறி இறக்கவும். இப்போது சுவையான பேரிச்சம் பழம் பச்சடி தயார்.

பேரிச்சம் பழத்தில் உள்ள சத்துக்கள்:

பேரிச்சம் பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து ,விட்டமின் ஏ, விட்டமின் கே, விட்டமின் சி, அயன், புரோட்டின், பினாலிக் அமிலம், காப்பர், செலினியம், போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.

பயன்கள்:
பேரிச்சம் பழத்தை நாம் தினமும் மூன்றிலிருந்து நான்கு பழம் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் அதுவே நம் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

குளிர்காலத்தில் ஏற்படும் மாரடைப்பை தடுக்கிறது மேலும் மூளையை சுறுசுறுப்பு ஆகும்.

உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் பேரிச்சம் பழத்தை தினமும் இரவில் தேனில் ஊறவைத்து அல்லது பாலில் ஊற வைத்தோ நான்கு எடுத்துக்கொண்டு வரலாம். இது கணிசமாக உடல் எடையை கூட்டும்

வெள்ளைச் சக்கரைக்கு மாற்றாக பேரிச்சம் பழத்தை கூட நாம் பயன்படுத்தலாம். சாக்லேட் கேட்டும் கேட்கும் குழந்தைகளுக்கு இந்த பேரிச்சம் பழத்தை கொடுக்கலாம் ஏனென்றால் இவற்றில் இயற்கையாகவே இனிப்பு சுவை அதிகம் நிறைந்துள்ளது.

இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். விட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ளதால் கண் பார்வையை கூர்மையாக்கும்.

கோளின் என்ற ஊட்டச்சத்து அதிகம் உள்ளது இது மூளையின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு நல்ல ஞாபக சக்தியை கொடுக்கும்.

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க நினைப்பவர்கள் பேரிச்சம் பழத்தை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வரலாம். மேலும் இது ரத்தத்தில் உள்ள கிருமிகளை சுத்திகரிக்கும்.

முடிகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இருப்பதால் முடி வளர்ச்சியை தூண்டும். இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

குளிர்காலத்தில் நம் உடலில் மெட்டபாலிசம் குறைவாக இருக்கும் பேரிச்சம் பழத்தை நாம் தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் மெட்டபாலிசம் தூண்டப்படுகிறது. குடல் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது.
இதில் உள்ள ப்ரோட்டின் எலும்புகளுக்கு நல்ல பலத்தை அளிக்கிறது.

பக்க விளைவுகள்:

நான் பேரிச்சம் பழத்தை ஒரு நாளுக்கு மூன்றிலிருந்து நான்கு பழம் மட்டுமே எடுத்துக் கொண்டு வர வேண்டும். சக்கரை வியாதி இருப்பவர்கள் இரண்டு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் குறைவான முறையில் எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு மேலிருக்கும் தோலை நீக்கிவிட்டு கொடுக்க வேண்டும்.

பேரிச்சம் பழத்தை நாம் வாங்கும் போது கொட்டையுடன் கூடிய பேரிச்சம்பழமே வாங்க வேண்டும். மேலும் அதன் மீது எண்ணெய்  சேர்த்து  பளபளப்பாக இருந்தால் அதை நாம் வாங்குவதை தவிர்க்கவும். பல் சொத்தை இருப்பவர்கள் மிக குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும்.
ஆகவே தினமும் நாம் பேரிச்சம் பழத்தை இரண்டு என்ற அளவில் எடுத்துக் கொள்வது மிகவும் ஆரோக்கியமானதாகும்.

Published by
K Palaniammal

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

4 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

4 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

5 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

5 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

8 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

8 hours ago