Beetrootmilkshake [Imagesource : Representative]
நம்முடைய அனைவரது வீடுகளிலும் பீட்ரூட்டை பயன்படுத்தி உணவு தயாரிப்பது உண்டு. பீட்ரூட்டை சாலட்கள், சூப்கள், சாம்பார், கூட்டு, இறைச்சி வகைகள் மற்றும் பழச்சாறுகள் போன்ற உணவுகளில் சேர்த்து சமைக்கலாம். பீட்ரூட்டில் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது.
பீட்ரூட்டில், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், நைட்ரேட்டுகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளது. பீட்ரூட்கள் குறைந்த கலோரி மற்றும் உயர் நார்ச்சத்துக்கள் உள்ளதால் இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் பீட்ரூட்டை வைத்து மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
Beetroot Milkshake செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு பீட்ரூட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு குக்கரில் போட்டு நான்கு விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். இதனை அடுத்து வேக வைத்த பீட்ரூட்டை எடுத்து மிக்ஸியில் நன்கு அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் மீண்டும் மிக்ஸியில் பால் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் அரைத்த பீட்ரூட்டை பாலில் சேர்த்து ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும். இப்போது சுவையான பீட்ரூட் மில்க் ஷேக் தயார்.
நாம் கடைகளில் விலை கொடுத்து மில்க் ஷேக் வாங்கி குடிப்பதை விட வீட்டிலேயே பீட்ரூட்டை வைத்து இவ்வாறு மில்க் ஷேக் செய்து குடிக்கும் போது அது சுவையாகவும் சுத்தமாகவும் இருப்பதுடன் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…