லைஃப்ஸ்டைல்

வீட்டிலேயே மாம்பழ ஐஸ்கிரீம் செய்யலாமா..? வாங்க எப்படின்னு பாக்கலாம்…!!

Published by
பால முருகன்

கோடை காலம் தொடங்கி விட்டாலே போதும் மக்கள் பலரும் ஐஸ்கிரீம்கள் மற்றும் மாம்பழங்களை விரும்பி சாப்பிடுவது உண்டு. அந்த வகையில், ஒரு சிலர் இரண்டையும் சேர்த்து மாம்பழஐஸ்கிரீம் ஆகவும் சாப்பிடுவது உண்டு. அதாவது  நாங்கள் எதை கூறுகிறோம் என்றால் கடையில் விற்பனை செய்யப்படும் “மாம்பழம் ஐஸ்கிரீம்” தான்.

Mango [Image source : file image ]

இந்த ஐஸ்கிரீமை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது உண்டு. எனவே, உங்களுடைய குழந்தைகளுக்கு பிடிக்கும் படி, இந்த சுவையான மாம்பழ ஐஸ்கிரீமை நாம் வீட்டிலேயே எப்படி எளிமையாக செய்வது என்பதை பற்றி விவரமாக பார்க்கலாம் வாருங்கள்..

மாம்பழம் ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள் 

Mango ice [Image source : file image ]

சுத்தமான சுவையான மாம்பழங்கள், சர்க்கரை, பால், ஃப்ரெஷ் கிரீம், ஜெர்ரி பலம், பாதாம் பருக்கள், உலர் திராட்சை

செய்முறை 

முதலில் நீங்கள் எடுத்து வைத்துள்ள மாம்பழங்களை நன்றாக கழுவிட்டு பிறகு தோலை எடுத்து சதையை சிறிய சிறிய துண்டாக நறுக்கவும். பிறகு அதில் தேவையான அளவிற்கு பால் மற்றும் தூள் சர்க்கரை, ஃப்ரெஷ் கிரீம்ஆகியவற்றை சேர்ந்து நன்றாக கலக்கவும். நீங்கள் அனைத்தையும் மிக்ஸியில் கூட கலக்கலாம் அல்லது ஹேண்ட் பிளெண்டரைப் பயன்படுத்தலாம்.

Mango ice [Image source : file image ]

ஹேண்ட் பிளெண்டரைப் பயன்படுத்தினால், முதலில் க்ரீமை தனித்தனியாக நன்றாக அடித்து, பின்னர் மீதமுள்ள பொருட்களுடன் கலக்கவும். கிரீமி பேஸ்ட் செய்ய அதை நன்றாக அரைக்கவும். மாவாக (பேஸ்ட) அரைத்துக்கொண்ட பிறகு காற்று புகாத கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றவும். அல்லது ஒரு கண்ணாடி பாத்திரத்தில் கூட  ஊற்றலாம்.

mango ice cream [Image source : file image ]

பிறகு, பாத்திரத்தில் ஊற்றி வைத்திருக்கும் அந்த பேஸ்ட்டில் உங்களுக்கு தேவையான அளவிற்கு பாதம் பருப்பு சேர்த்து கொள்ளலாம், அல்லது உலர் திராட்சையும் சேர்த்துக்கொள்ளலாம். உலர் திராட்சையை சிறிது நேரம் வறுத்து எடுத்த கொண்டு கூட போட்டுக்கொள்ளலாம். மேற்கண்ட செய்யமுறைகள் எல்லாம் நீங்கள் செய்துளீர்களா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.

mango ice cream [Image source : file image ]

பிறகு ஊற்றி வைத்திருக்கும் அந்த பேஸ்ட்டை குளிர்சாதன பெட்டியில் 6-7 மணிநேரம் அல்லது ஒரே இரவில்  உறைய வைக்கவும். பிறகு எடுத்து பார்த்தால் இந்த கோடையில் குளிர்ந்த இனிமையான இயற்கை மாம்பழ ஐஸ்கிரீமை ரெடியாக இருக்கும். பிறகு என்ன..? எடுத்து உங்கள் குடும்பங்களுடன் சந்தோசமாக சாப்பிட்டு மகிழுங்கள்.

கோடை காலத்தில் மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

கோடை காலத்தில் நாம் எதற்காக மாம்பழம் சாப்பிடுகிறோம் அதற்கான நன்மை என்னவென்றால் நாம் எப்போதாவது யோசித்தது உண்டா…சிலர் கோடை காலத்தில் மாம்பழங்களை சாப்பிடுவது உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் என கூறுவார்கள். ஆனால். அதிக அளவில் எடுத்துக்கொண்டால் மட்டுமே தான் அது உடலில் வெப்பத்தை அதிகப்படுத்தும்.

mango ice cream [Image source : file image ]

எனவே, ஒரு அளவிற்கு மேல் மாம்பழத்தை சாப்பிடாதீர்கள். மேலும், கோடை காலத்தையும் தாண்டி மாம்பழம் சாப்பிடுவதால் நமக்கு பல ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கிறது. அது என்னவென்றும் கொஞ்சம் பார்க்கலாம்.

  • நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது
  • சருமத்தின் அழகை மேம்படுத்துகிறது
  • உடல் எடையை குறைக்க உதவுகிறது
  • செரிமானத்திற்கு உதவுகிறது
Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

11 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

13 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

13 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago