உங்க குழந்தைகளுக்கு பிடித்த பால் பணியாரம் செய்யலாமா?

Published by
K Palaniammal

பால் பணியாரம் -இந்தக் கோடை விடுமுறையை தித்திப்போட கழிக்க பால் பணியாரம் செய்வது எப்படி என பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:

  • பச்சரிசி =1 கப்
  • உளுந்து =1 கப்
  • முழு தேங்காய் =1
  • ஏலக்காய் தூள் =1 ஸ்பூன்
  • சர்க்கரை =தேவைக்கேற்ப
  • உப்பு சிறிதளவு
  • எண்ணெய் =தேவைக்கேற்ப

செய்முறை :

முதலில் எடுத்து வைத்துள்ள உளுந்து மற்றும் பச்சரிசியை மூன்று முறை கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு அதை சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். மாவு ,இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். அதிகமாக தண்ணீர் சேர்த்து அரைக்கக் கூடாது.

இப்பொழுது தேங்காயையும் பால் எடுத்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். இரு முறை பால் எடுத்தால் போதுமானது. பால் எடுத்த பிறகு சர்க்கரை உங்கள் இனிப்புக்கு தகுந்தவாறு சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் ஏலக்காய் தூளும் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கிக் கொள்ளவும். அந்த எண்ணெயில் அரைத்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்துப் போட்டு பொன்னிறமாக பொறித்தெடுக்கவும். பிறகு அந்த பொறித்த பணியாரங்களை மிதமான சூடு உள்ள தண்ணீரில் சேர்த்து கிளறிவிட்டு எடுத்து விடவும்.

அப்போதுதான் அதில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேறும். இப்பொழுது அந்தப் பணியாரத்தை தேங்காய் பாலில் அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்தால் சுவையான பால் பணியாரம் தயாராகிவிடும்.

Recent Posts

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

6 minutes ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

49 minutes ago

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…

1 hour ago

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…

2 hours ago

இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!

சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…

2 hours ago

நெஞ்சை உலுக்கும் காட்சி.., அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…

3 hours ago