அடடே! கொள்ளு பயிரில் வடை செய்யலாமா?.. இது தெரியாம போச்சே.!

Published by
K Palaniammal

கொள்ளு பயிரை வைத்து ரசம், குழம்பு, சட்னி என பல வகைகளில் ருசித்திருப்போம். இன்று கொள்ளு பயிறு வடை எவ்வாறு செய்வது என்பது பற்றி  இப் பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • கொள்ளு =400 கிராம்
  • இஞ்சி =2 இன்ச்
  • பூண்டு =15 பள்ளு
  • சோம்பு =1 ஸ்பூன்
  • பட்டை =1
  • பெருங்காயத்தூள் =1 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் =150 கிராம்
  • கருவேப்பிலை தேவையானவை
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் பொறிக்க தேவையான அளவு

செய்முறை
கொள்ளு பயிரை நன்றாக கழுவி காய்ந்த மிளகாய் 4 சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். ஊற வைக்க தேவையில்லை. தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரைக்க வேண்டும். பாதி அரைத்த பிறகு அதிலே பூண்டு ,இஞ்சி ,கருவேப்பிலை, சோம்பு ,பட்டை ,பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து அரைக்கவும் சிறிது நேரம் கழித்து சின்ன வெங்காயத்தையும் சேர்த்து அரைக்கவும். வெங்காயம் லேசாக அரை பட்டாலே போதுமானது.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதிலே பால் பணியார உருண்டை போல் சிறிய சிறிய உருண்டைகளாக போட்டு எடுக்கவும் இப்போது சத்தான ருசியான கொள்ளு வடை ரெடி.

பயன்கள்
இளைத்தவனுக்கு  எள்ளை  கொடு கொடுத்தவனுக்கு கொள்ளை கொடு என கூறுவார்கள். ஒருவர் உடல் எடை அதிகமாக இருந்தால் கொள்ளு பயிரை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் எடுத்துக் கொள்ளலாம் கொள்ளு கொழுப்பை குறைக்கும்.

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் எண்ணெய் சேர்க்காமல் அவித்து உப்பு மட்டுமே சேர்த்து அல்லது முளைக்கட்டியும் எடுத்துக் கொள்ளலாம்.

உடலுக்கு நல்ல பலத்தை  கொடுக்கக் கூடியது அதனால்தான் குதிரையின் பிரதான உணவாக கொள்ளு திகழ்கிறது.

சுவாசக் கோளாறு
சளி, இருமல் ,காய்ச்சல் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு கொள்ளை ரசமாக வைத்து கொடுக்கலாம்.

சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மையும் கொண்டுள்ளது. கொள்ளு பயிரை அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் சூட்டை அதிகரிக்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே கொள்ளு பயிரை தனியாக செய்து கொடுத்தால் ஒரு சில குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் இவ்வாறு பலகாரங்கள் போல் வித்தியாசமான முறையில் சமைத்துக் கொடுத்தால் விரும்பி உண்ணுவார்கள்.

Recent Posts

‘திமுக செய்யும் தவறுகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜால்ரா போடுவது வெட்கக்கேடு’ – இபிஎஸ் விமர்சனம்.!

திருவாரூர் : திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.முன்னதாக, திருவாரூர்…

4 hours ago

வரதட்சணை கொடுமை வழக்கு – காவலர் பூபாலன் பணியிடை நீக்கம்.!

மதுரை : மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் பூபாலன், தனது மனைவிக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும்,…

4 hours ago

வாக்களிக்கும் வயது 16ஆக குறைப்பு: இங்கிலாந்து தேர்தல் முறையில் மாற்றம்.!

லண்டன் : நாட்டின் ஜனநாயக அமைப்பை பெரிய அளவில் மாற்றியமைக்கும் வகையில், அனைத்து இங்கிலாந்து தேர்தல்களிலும் 16 மற்றும் 17…

5 hours ago

வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!

மயிலாடுதுறை : அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன்படி,…

6 hours ago

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்.!

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து…

6 hours ago

”காவலர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்” – மு.க.ஸ்டாலின் அறிவுரை.!

சென்னை : தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, வண்டலூர்…

6 hours ago