லைஃப்ஸ்டைல்

Face Shining : இந்த இரண்டு பொருட்கள் போதும்..! உங்கள் சருமம் பளபளக்க சூப்பர் டிப்ஸ் இதோ..!

Published by
லீனா

இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்கின்றனர். அதிலும், பெரும்பாலானவர்கள் இயற்கையான முறையில் முகத்தின் அழகை மெருகூட்டுவதை தவிர்த்து, கடைகளில் கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி தான் பயன்படுத்துகின்றனர். இதனால், நமது சருமத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கெமிக்கல் கலந்த கிரீம்களை நாம் பயன்படுத்துவதால், உடனடியாக முகம் பளபளப்பானாலும் அதன் பின்பு பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆனால், நாம் இயற்கையான முறைகளை பயன்படுத்தும் போது, நமக்கு தீர்வு பொறுமையாக கிடைத்தாலும், அது நிரந்தரமானதாய், பக்க விளைவுகள் இன்றி இருக்கும்.

எனவே இப்படிப்பட்ட கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்த்து, வீட்டிலேயே இயற்கையான முறையில் எப்படி முகத்தை பளபளக்க செய்யலாம் என்பது பற்றி தற்போது இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையானவை 

  • தக்காளி
  • சீனி

செய்முறை 

தக்காளி, சீனி இந்த இரண்டு பொருட்களுமே நமது வீடுகளில் எப்போதும் இருக்கக் கூடிய ஒன்றுதான். இது மிகவும் விலை குறைவானதும் கூட. தக்காளியை சரி பாதியாக வெட்டிக்கொண்டு, அதனை சீனியை தொட்டு முகத்தில் அந்த சீனி கரையும் வரை நன்கு முகத்தில் தடவி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

இப்படி செய்யும் போது முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறுவதோடு, முகம் பளபளப்பாகவும் மாறும். இவ்வாறு நாம் வெளியில் எங்காவது செல்ல வேண்டிய சூழல் இருந்தால், விலை கொடுத்து அழகு நிலையங்களுக்கு சென்று முகத்தை பளபளக்க செய்யாமல், வீட்டிலேயே 30 நிமிடங்களில் நமது முகத்தை நாமே பளபளப்பாக வைத்துக் கொள்வதற்கு  இது ஒரு சிறந்த முறை  ஆகும்.

தக்காளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சுத்தப்படுத்தவும், இறந்த செல்களை நீக்கவும் உதவுகிறது. இது சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது. மேலும், தக்காளியில் உள்ள லிகோபின் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.

Published by
லீனா

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

9 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

9 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

10 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

10 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

13 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

13 hours ago