fOOD [Imagesource : Representative]
நமது வீடுகளில் தினமும் விதவிதமான சமையல்களை செய்கிறோம். இந்த சமையலில் தினமும் நமக்கு தேவையான ஏதாவது ஒரு பொரியல் செய்வது வழக்கம். ஏதாவது குழம்பு வைத்தாலே அதனுடன் ஏதாவது ஒரு கூட்டு நாம் செய்வதுண்டு. இதை தான் வீட்டில் உள்ளவர்களும் எதிர்பார்ப்பார்கள்.
அந்த வகையில் நாம் செய்யும் கூட்டுக்கு மசாலா பொடிகளை கடையில் தான் வாங்குவது வழக்கம். தற்போது இந்த பதிவில், பொரியல் செய்வதற்கு நாம் வீட்டிலேயே மசாலா தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் மல்லி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, நிலக்கடலை, சீரகம், வரமிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அவற்றை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே பாத்திரத்தில் கருவேப்பிலை, எள்ளு ஆகியவற்றை போட்டு வறுக்க வேண்டும். அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் இடித்து வைத்துள்ள பூண்டு மற்றும் துருவிய தேங்காயை தனிதனியாக பாத்திரத்தில் போட்டு வறுத்து எடுத்து, அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் மிக்சியில் நாம் வறுத்து வைத்துள்ள பொருட்களை போட்டு, அதனுள் காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை போட்டு அரைத்து எடுத்து, அதனை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பொரியல் பொடியை நம் வீட்டில் செய்து, எந்த பொரியலுக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். நம் கடைகளில் வாங்கும் பொரியல் பொடியை விட வீட்டில் செய்வது சுகாதாரமான முறையில் இருப்பதுடன், சுவையாகவும் இருக்கும்.
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து…
சென்னை : அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான அன்வர் ராஜா திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக,…
சென்னை : தென்னிந்தியபகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்குசுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி -…
ஜார்ஜியா : இந்திய செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி இந்த ஆண்டு FIDE மகளிர் செஸ் உலகக் கோப்பையில் வரலாறு…
பக்ரியா : சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் காலித் பின் தலால் அல்-சவுத், ''தூங்கும் இளவரசர்'' என்று…
ஆந்திரா : ஆந்திராவில் ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயரும்…