கோடை காலத்தில் ஏற்படும் வறட்சியில் இருந்து தப்பித்து கோடையை குளுமையாக கொண்டாட மேங்கோ மஸ்தானியை அருந்துங்கள்.இது குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் இதனை அவர்கள் விரும்பி உண்பார்கள்.
மாம்பழத்தில் வைட்டமின் சி சத்துநிறைந்து காணப்படுகிறது.இது நமது உடலில் ஏற்படும் இரத்த சோகை பிரச்சனையை குணப்படுத்த மிகவும் சிறந்தது. மேலும் எலும்புகளுக்கும் மிக சிறந்த பலத்தை கொடுக்கும்.மேங்கோ மஸ்தானி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
மாம்பழம் -1கப் நறுக்கியது
வென்னிலா ஐஸ் கீரிம் -2 கியூப்
காய்ச்சி ஆற வைத்த பால் -1 கப்
நட்ஸ் துருவல் சிறிதளவு
சர்க்கரை -2 ஸ்பூன்
முதலில் மாம்பழம் , பால் மற்றும் வென்னிலா ஐஸ் கீரீம் ,சர்க்கரை சேர்த்து பிளெண்டரில் நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
அதனை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதில் ஐஸ்கீரிம் கியூப்பை வைத்து பின்பு நட்ஸ் துருவலை தூவி பரிமாறவும்.இப்போது சுவையான மேங்கோ மஸ்தானி ரெடி.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…