ஒத்தடம் கொடுக்கும் முறை- ஐஸ் கட்டி ஒத்தடம், சுடு தண்ணீர் ஒத்தடம் இதில் எது சிறந்த வலி நிவாரணி என்பதை இங்கே அறியலாம் .
ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுக்கும் போது தசை ஆனது சுருங்கப்படும். அதாவது ரத்த நாளங்கள் சுருங்கப்படுகிறது. உதாரணமாக நம் உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் உடலில் உள்ள ரத்த அணுக்கள் அந்த இடத்தில் வந்து குவியும்.
அப்போது நம் உடலானது பலவீனமாகும். அந்த இடத்தில் வீக்கமும் அதிகமாகிக் கொண்டே போகும், இதனை தடுக்க ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுப்பதுதான் சிறந்தது. இந்த ஐஸ் கட்டி ஒத்தடத்தை கொடுக்கும் போது அந்த இடத்தில் உள்ள ரத்த நாளங்கள் சுருங்கிவிடும்.
இது அடிபட்ட உடனே அதாவது ஒரு மணி நேரத்திற்குள் இந்த ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்க வேண்டும் .மேலும் வீக்கம், ரத்த காயம் ,சுளுக்கு ,ஒற்றைத் தலைவலி, பல் வலி, தாடை வலி , போன்றவற்றிற்கு அப்போதைய நேரத்திற்கு இந்த சிகிச்சை நல்ல பலனை கொடுக்கும்.
இந்த சுடுதண்ணீர் ஒத்தடத்தை நீண்ட நாட்களாக ஒரு இடத்தில் காயமோ வீக்கமோ இருந்து அது வலி ஏற்படுத்துவது மற்றும் இழுத்து பிடிப்பது போன்ற உணர்வு இருந்தால் சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம். மேலும் கை, கால் பிடிப்பு ,எலும்பு வலி, இடுப்பு வலி ,தோல் பட்டை வலி போன்ற உடல் வலிகளுக்கும் சுடு தண்ணீர் ஒத்தடம் மிகச்சிறந்த தீர்வை கொடுக்கும்.
குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிறு வலி சரியாக இந்த சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம். ஒரு சிலர் ஒற்றை தலைவலிக்கு சுடு தண்ணீரைக் கொண்டு ஒத்தடம் கொடுப்பார்கள் அவ்வாறு செய்யக்கூடாது இதற்கு ஐஸ் கட்டி ஒத்தடம் தான் சிறந்த பலனை கொடுக்கும் .
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…