அசத்தலான சுவையில் காளான் சுக்கா செய்வது எப்படி?

Published by
K Palaniammal

Mushroom recipe – காளானை வைத்து காளான் சுக்கா செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள் :

  • காளான்= 200 கிராம்
  • எண்ணெய் =ஆறு ஸ்பூன்
  • சோம்பு =1 ஸ்பூன்
  • பெரிய வெங்காயம்= இரண்டு
  • தக்காளி= ஒன்று
  • பூண்டு =6 பள்ளு
  • பச்சை மிளகாய் =3
  • மஞ்சள் தூள்= அரை ஸ்பூன்
  • மட்டன் மசாலா =ஒரு ஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், கருவேப்பிலை, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் .பிறகு அதிலே பச்சை மிளகாய், தக்காளியும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும் நன்கு வதங்கியதும் மட்டன் மசாலா மற்றும் மஞ்சள் துளை  சேர்த்து கலந்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் .பிறகு அதை ஆற வைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது அதே பாத்திரத்தில் மீண்டும் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சோம்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் காளானை சேர்த்து சிறிதளவு உப்பும் சேர்த்து எண்ணையிலேயே வேக வைத்துக் கொள்ளவும்.

முக்கால் பதம் வெந்த பிறகு அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் தண்ணீர் சிறிதளவு சேர்த்து கலந்து  அந்த தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி விடவும். இப்போது எண்ணெய்  பிரிந்த பிறகு அதில் மல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான காளான் சுக்கா ரெடி.

Recent Posts

ரோஹித் – கோலி ஓய்வு பெற அழுத்தம் கொடுக்கப்பட்டதா? விளக்கம் கொடுத்த பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…

23 minutes ago

யூடியூப் புதிய விதிகள் : தரமற்ற வீடியோக்களுக்கு இனி காசு இல்லை!

யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது.  இதில் பலர்…

1 hour ago

’பென்ஸ்’ பட ஒளிப்பதிவாளரை திருமணம் செய்யப்போகும் நடிகை தான்யா!

சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…

2 hours ago

த.வெ.கவின் அடுத்த டார்கெட்…கோலாகலமாக நடந்த 2வது மாநாடு பந்தக்கால் நடும் விழா!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…

3 hours ago

நிமிஷா பிரியா வழக்கு : “ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சி” – ஏ.பி.அபூபக்கர்!

டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…

3 hours ago

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…இன்று 2 மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…

3 hours ago