மொறுமொறுவென சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

Published by
K Palaniammal

Yam fry recipe-வித்தியாசமான சுவையில் சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்:

  • சேனைக்கிழங்கு= 300 கிராம்
  • சோம்பு=2  ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்  =ஒரு ஸ்பூன்
  • பட்டை =அரை இன்ச்
  • கிராம்பு=1
  • வெங்காயம் =இரண்டு
  • தக்காளி =ஒன்று
  • கசகசா= ஒரு ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் =ஒரு ஸ்பூன்
  • சீரகத்தூள் =அரை ஸ்பூன்
  • எண்ணெய் =தேவைக்கேற்ப

செய்முறை;

சேனைக்கிழங்கை சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் .கை அரிக்காமல்  இருக்க கையில் சிறிதளவு எண்ணெய்  தடவிக் கொண்டு பிறகு சுத்தம் செய்யவும். இப்போது கிழங்கை  நறுக்கி நன்றாக கழுவி விட்டு மற்றொரு பாத்திரத்தில் சேர்த்து கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சிறிதளவு புளி கரைசல் சேர்த்து 50 சதவீதம் வேக வைத்துக் கொள்ளவும்.

இப்போது பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வேகவைத்த கிழங்கை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். பிறகு மற்றொரு பாத்திரத்தில்  நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சோம்பு ஒரு ஸ்பூன், சிறிதளவு கருவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து தாளித்து வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளியும் சேர்த்து நன்கு மசிந்து வரும் வரை வதக்கி அதனுடன் மிளகாய் தூள் மற்றும் சீரகத்தூளை சேர்த்து கலந்து விடவும்.

இப்போது வறுத்து வைத்துள்ள சேனைக்கிழங்கை சேர்க்கவும். பிறகு  மிக்ஸியில் தேங்காய் ,ஒரு ஸ்பூன் சோம்பு பட்டை, கிராம்பு, கசகசா ஆகியவற்றை சேர்த்து  அரைத்துக் சேனைக்கிழங்குடன்  சேர்த்து கலந்து விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும். இரண்டு நிமிடம் கழித்து கிளறி இறக்கினால் மொறு மொறுவென சேனைக்கிழங்கு வறுவல் தயார்.

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

5 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

6 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

7 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago