நம்மில் அதிகமானோர் தினமும் விதவிதமான குழம்புகளை வைத்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான பொட்டுக்கடலை குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொண்டு, பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவேண்டும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நன்கு சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு பொரிய விட வேண்டும். பிறகு பச்சை மிளகாயை போட்டு 2 நிமிடம் வதக்கி வெங்காயத்தை சேர்த்து வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு குழைய வதக்கி தேவையான அளவு தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி வைக்கவேண்டும்.
தண்ணீர் ஓரளவு சுண்ட தொடங்கும்போது, பாத்திரத்தை இறக்கி வைத்து பொடித்து வைத்த பொட்டுக்கடலை மெதுவாக தூவி கட்டி இல்லாமல் கலக்க வேண்டும். பிறகு கொத்தமல்லி தூவிப் பரிமாற வேண்டும். இப்போது சுவையான பொட்டுக்கடலை குழம்பு தயார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…