chilli chappathi
Chilli chappathi-சப்பாத்தி மீதம் ஆகிவிட்டால் அதை வீணாக்காமல் சில்லி சப்பாத்தி செய்வது எப்படி என இப்பதிவில் பார்ப்போம்.
முதலில் சப்பாத்தியை ஒன்றாக எடுத்து வைத்து அதை உங்களுக்கு பிடித்த வடிவத்தில் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் இரண்டு ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும்.
இப்போது நறுக்கி வைத்துள்ள சப்பாத்தி துண்டுகளை அதிலே சேர்த்து மொறுமொறுவென்று பொரித்தெடுக்கவும். இவ்வாறு பொரித்து எடுத்தால் சில்லி சப்பாத்தி சுவையாக இருக்கும்.
மற்றொரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும், பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கி அதிலே இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
இப்போது அதிலே கரம் மசாலா மற்றும் மல்லித்தூளை சேர்த்து கிளறி தேவைப்பட்டால் தக்காளி சாஸ் சேர்த்தும் கிளறினால் சுவை நன்றாக இருக்கும். அதன் பிறகு நாம் வறுத்து வைத்துள்ள சப்பாத்தி துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து விடவும். ஐந்து நிமிடம் வரை திருப்பி திருப்பி கலந்து விட்டு இறக்கினால் சுவையான சில்லி சப்பாத்தி ரெடி.
நீங்கள் சப்பாத்தி செய்யும் போது இதுபோல் வித்தியாசமான முறையில்செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…