இன்றைய காதலர்களுக்கு காதல் சுகமானதா? சுமையானதா?
இந்த உலகமே இன்று காதலால் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு உயிரினங்களும் ஒவ்வொன்றின் மீது காதல் வைத்திருக்கின்றனர். உலகமெங்கும் காதல் பரவிபோயிருக்கிறது. இன்றுவரை பல காதல் கதைகள், கவிதைகள், கதைகள், காவியங்கள் என உருவாகியுள்ளது
அன்று இந்த காதல் கோழையை வீரனாக்கி காட்டியது. ஏனென்றால் அன்றைய மன்னர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு வீரனை தான் மணம் முடித்து வைக்கின்றனர். இதுதான் அன்றைய காதலாக இருந்தது. ஆனால் இன்றைய காதல், காதலுக்கு கண்கள் இல்லை என்று கூறியவாறு யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்த உலகம்.
அன்றைய புலவர்கள் காதலை புனிதமானதாக கருதினர். அதனால்தான் பாரதியார் ‘காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம், கானமுண்டாம், சிற்பம் முதலிய கலைகளுண்டாம் ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே‘ என்று பாடியுள்ளார். நமக்கு முன் தோன்றிய நமது முன்னோர்களின் காதல் அனைத்துமே, காதலை சுவையானதாகவும் சுகமானதாகவும் தான் எடுத்துக் காட்டியது. ஆனால் இன்று இந்த காதல் பலருக்கு, சுமையானதாக தான் காட்டுகிறது.
இன்று காதல் என்பது மனிதர்களுக்கு மட்டும் ஆனது மட்டுமல்ல. அனைத்து ஜீவராசிகளுக்கும் காதல் உணர்வுகள் உண்டு. பறவைகளும் விலங்குகளும் உற்று கவனித்தால் அவர்களுக்கு இடையேயான காதல் நமக்கு தெரியும். மனித சமூகத்தில் காதல் என்பது எத்தனையோ விஷயங்களை நிகழ்த்துகிறது.
ஒருவன் ஒரு பெண்ணை காதலிக்க தொடங்கி விட்டால் அவனுடைய பேச்சில், நடை, உடை பாவனையில் மாற்றம் ஏற்படுகிறது. திறமைகளை வெளிப்படுத்துவது புதிய உற்சாகமும் உத்வேகமும் காதல்தான் மையப்புள்ளியாக இருக்கிறது. காதல் ஒரு உருவாக்கவும் செய்கிறது. அளிக்கவும் செய்கிறது. உருவாக்கப்பட்ட மனிதனுக்கு காதல் சுகமானது. அனால், உருகுலைக்கப்பட்ட மனிதனுக்கு காதல் சுமையானது. காதலர் தினம்
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…