மணக்க மணக்க இட்லி பொடி செய்யும் முறை..!

Published by
K Palaniammal

இட்லி பொடி -கமகமவென வாசனையுடன் இட்லி பொடி செய்வதன் ரகசியத்தை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்;

  • அரிசி= கால் கப்
  • உளுந்து= 200 கிராம்
  • கடலைப்பருப்பு =100 கிராம்
  • பூண்டு= கால் கப்
  • கருவேப்பிலை= ஒரு கைப்பிடி
  • கட்டி பெருங்காயம்= 10 கிராம்
  • காஷ்மீர் மிளகாய்= 10
  • காய்ந்த மிளகாய்= 75 கிராம்
  • கல் உப்பு= இரண்டு ஸ்பூன்.

செய்முறை;

முதலில் ஒரு பாத்திரத்தில்  அரிசியை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும் .பிறகு உளுந்து கடலைப்பருப்பு, கல் உப்பு ,தோலுடன் கூடிய பூண்டு ஆகியவற்றையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலையும் வறுத்தெடுத்துக் கொள்ளவும். பிறகு அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தையும் வறுக்கவும். இப்போது இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகாயை இரண்டாக்கி வறுத்தெடுத்துக் கொள்ளவும். பிறகு இவற்றை நன்றாக ஆற வைத்துக் கொள்ளவும்.

ஆறிய  பிறகு மிக்ஸியில் மிளகாய் ,கல் உப்பு, பெருங்காயம் இவற்றை ஒரு நிமிடம் அரைத்துக் கொள்ளவும் .அதன் பிறகு கடலைப்பருப்பு, உளுந்து ,அரிசி,  சேர்த்து இரண்டு சுற்று அரைத்து பிறகு கருவேப்பிலை மற்றும் பூண்டை சேர்த்து இட்லி பொடி பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ளவும். இப்போது கம கம வென வீடு மணக்கும் இட்லி பொடி தயார். இதை சூடான இட்லியுடன் தேவையான அளவு நம் தயாரித்துள்ள இட்லி பொடியை சேர்த்து அதனுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் அமர்க்களமாக இருக்கும்.

Published by
K Palaniammal

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

9 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

9 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

10 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

10 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

13 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

13 hours ago