லைஃப்ஸ்டைல்

மாதுளை பிரியர்களே.! மறந்தும் கூட இந்த நேரத்தில் மாதுளையை சாப்பிடாதீங்க..

Published by
K Palaniammal

பொதுவாக சிவப்பு நிறம் கொண்ட பழங்கள் அனைத்துமே எண்ணற்ற பயன்களை ஒளித்து  வைத்திருக்கும். அதிலும் மாதுளை எண்ணில் அடங்கா நன்மைகளை வைத்துள்ளது. அதனால்தான் முத்துக்களின் ராணி எனவும் புகழப்படுகிறது.பல மாத்திரைகள் சேர்ந்து செய்யக்கூடிய இசையத்தை இந்த மாதுளை அசால்டாக செய்துவிடும்.இதில் விட்டமின் ஏ ,விட்டமின் சி ,கே, ஒமேகா 5 ஆன்ட்டி ஆக்சிடென்ட், மற்றும் பாலிபீனால்,இரும்பு சத்து   அதிகம் நிறைந்துள்ளது.

இதில் பாலிபீனால் அதிகம் உள்ளதால் வாதம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் பாதுகாக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் அல்சைமர் நோய் வராமல் தடுக்கும். இதை குழந்தைகளுக்கு தினமும் ஒன்று கொடுத்து வர நல்ல ஞாபக சக்தியை அதிகப்படுத்தும். மேலும் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயை தடுக்க கூடியது என பல ஆய்வுகளில் கூறுகின்றனர்.

கருவுற்ற பெண்கள் தினமும் ஒன்று சாப்பிட்டு வர குழந்தை ஆரோக்கியமாகவும் நல்ல மூளை செயல்பாட்டுத் திறனையும் கொண்டு பிறக்கும். முகப்பரு மற்றும் கரும்புள்ளி இருக்கும் இடத்தில் இதன் சாறை வைத்து வர நாளடைவில் மறைந்துவிடும். அல்சர் இருப்பவர்கள் தினமும் ஜூசாக  எடுத்து வந்தால் விரைவில் குணமடையும். அது மட்டுமில்லாமல் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கச் செய்யும். இருமல் இருப்பவர்கள் மாதுளை சாற்றுடன் இஞ்சி கலந்து எடுத்து வந்தால் வரட்டு இருமல் குணமாகும்.

அடடே இது தெரியாம போச்சே! தயிர் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?

ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு தன்மை உள்ளது அது போல் பழங்களை சாப்பிடுவதற்கும் நேரம் உள்ளது. பொதுவாக பழங்களை காலை நேரங்களில் எடுத்துக் கொள்வது சிறந்தது. அதுவும் வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால் அதன் முழு பலனையும் நாம் அடையலாம். ஏனென்றால் மற்ற நேரங்களை காட்டிலும் எளிதாக செரிக்க  வைத்து அதன் முழுபலனையும் கிடைக்கச் செய்யும்.

எந்த ஒரு பழத்தையும் தூங்குவதற்கு முன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், ஏனென்றால் பழங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். அதை இரவு நேரத்தில் எடுத்துக் கொண்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதோடு தூக்கமின்மை, செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். இது மாதுளைக்கு சற்று அதிகமாகவே பொருந்தும். மாதுளை சாப்பிடுவதற்கும் முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு பிறகு மாதுளை எடுத்து வந்தால் சிறந்தது.

எந்த ஒரு பழத்தையும் ஜூஸ் ஆக எடுத்துக் கொள்வதை விட அதை கடித்து மென்று சாப்பிடுவதே உடலுக்கு ஆரோக்கியம். மாதுளை உரித்து சாப்பிடுவது சற்று சிரமமாக இருந்தாலும் அதன் எண்ணற்ற பயன்களை நாம் பெற வேண்டும் என்றால் தினமும் ஒன்று எடுத்து வரவேண்டும். வாரத்தில் நான்கு முறையாவது எடுத்துக் கொள்வது சிறந்தது.

Published by
K Palaniammal

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

5 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

5 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

6 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

6 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

9 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

10 hours ago