இது போன்ற உதவிகளை செய்தால் உங்கள் துணையின் மனஅழுத்தம் குறைய தொடங்கும்.
வீட்டில் வேலைகள் அதிகமாக இருந்தால் அதை ஒருவரே செய்யும் பட்சத்தில் மனஅழுத்தம் அதிகமாக ஏற்பட தொடங்கும். கணவன் வேலைக்கு சென்ற பிறகு, வீட்டில் உள்ள சமையல் முதல் வீட்டை சுத்தம் செய்வது வரை என அனைத்து வேலைகளையும் தனியாக செய்து வந்தால் அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய மனஅழுத்தத்தை கொடுக்கும். இந்த மனஅழுத்ததால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை தொடங்கும். இதை சமாளிப்பது என்பது அரிதாகி விடும். இதற்கு எளிய வழியில் இது போன்ற உதவிகளை உங்கள் துணைக்கு செய்யுங்கள். பாதிப்புகளும் குறையும், உங்கள் துணையின் மனஅழுத்தமும் குறையும்.
சமையல் உதவி: சமையலில் உங்கள் துணைக்கு உதவுவதன் மூலமாக மிகப்பெரிய சிக்கலில் இருந்து காக்க முடியும். காய்கறி வெட்டுதல், குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டிய பொருட்களை வைத்தல், அங்கிருக்கும் பழங்களை கழுவி வைத்தல் இது போன்ற சிறிய வேலைகளை செய்து வாருங்கள்.
சுத்தம் செய்தல்: உங்களுக்கு பெரிதாக சமைக்க தெரியாவிட்டாலும் தூய்மை படுத்துவதில் உதவி செய்வது எளிது. வீட்டை தூய்மை படுத்துவது, மேஜையை சுத்தப்படுத்துவது, படுக்கைகளை அடுக்கி வைப்பது என செய்யலாம்.
குழந்தைகளை பராமரித்தல்: வீட்டில் எந்த வேலையும் செய்யாவிட்டாலும் குழந்தைகளை பராமரிக்க உதவினாலே அது பெரிய உதவியாக இருக்கும். அதனால் குழந்தைகளை கவனித்து கொள்வது, விளையாடுவது, உணவு கொடுப்பது என செய்யலாம். பெரிய குழந்தைகளாக இருந்தால் அவர்களின் உதவியுடன் வீட்டில் தூய்மை படுத்தும் வேலையை செய்யலாம்.
இதுபோன்று செய்வது உங்கள் துணைக்கு மன நிம்மதியை கொடுக்கும். நீங்களும் துணையும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும்.
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…