idli manchurian
இட்லி மஞ்சூரியன் -இட்லியை வைத்து மஞ்சுரியன் செய்வது எப்படி என இப்பதிவில் காண்போம்.
முதலில் இட்லியை சிறிது சிறிதாக க்யூப் வடிவத்தில் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தையும் கியூப் வடிவத்தில் நறுக்கி எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் இட்லியை பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக பொறித்து எடுக்கவும் .
மற்றொரு பாத்திரத்தில் ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பூண்டை பொன்னிறமாக வறுக்கவும் .பிறகு பச்சை மிளகாய் ,வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு குடை மிளகாயையும் சேர்த்து கிளறி விடவும். அதிக நேரம் குடைமிளகாயை வதக்க கூடாது. குடைமிளகாயுடன் தக்காளி சாஸ் , சிகப்பு மிளகாய் சாஸ் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கொள்ளவும் ,இப்போது சோயா சாஸ் அரை ஸ்பூன் சேர்க்க வேண்டும். பிறகு அரை ஸ்பூன் கான்பிளவர் மாவை தண்ணீரில் கலந்து சேர்த்து கிளறி விடவும். கடைசியாக கொத்தமல்லி இலைகளையும் இட்லியையும் சேர்த்து மசாலா நன்கு இட்லியில் படும் வரை சிறிது நேரம் கிளறிவிட்டு இறக்கினால் இட்லி மஞ்சூரியன் தயாராகிவிடும்.
எப்போதும் இட்லி சட்னி, சாம்பார் என சாப்பிடுவதைவிட இதுபோல் மஞ்சூரியன் போல் செய்து சாப்பிடலாம் அல்லது மீதமான இட்லியை வைத்து உப்புமா செய்வதை விட இதுபோல் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
திருவாரூர் : திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.முன்னதாக, திருவாரூர்…
மதுரை : மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் பூபாலன், தனது மனைவிக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும்,…
லண்டன் : நாட்டின் ஜனநாயக அமைப்பை பெரிய அளவில் மாற்றியமைக்கும் வகையில், அனைத்து இங்கிலாந்து தேர்தல்களிலும் 16 மற்றும் 17…
மயிலாடுதுறை : அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன்படி,…
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து…
சென்னை : தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, வண்டலூர்…