வானிலை

நெருங்கும் புயல்! மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன? விவரம் இதோ!

சென்னை :  தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று மாலை 4 மணியளவில் ஃபெங்கால் புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே, வானிலை தொடர்பான செய்திகளை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி மீனவர்களுக்கு கொடுத்த எச்சரிக்கை பற்றிய தகவலை பார்பபோம். மீனவர்களுக்கான எச்சரிக்கை :  தமிழக கடலோரப்பகுதிகள் 27 முதல் 29 வரை: தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் […]

#Chennai #IMD 7 Min Read
fisherman alert rain

மழை அப்டேட்: இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலைக்குள் புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களுக்கு நாளை அதிகாலை வரை அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 1 மணி நேரத்திற்கு 10 கி.மீ வீதம் […]

#Chennai 4 Min Read
Red Alert rain

இன்னும் 6 மணிநேரத்தில்., நெருங்கும் புயல்! வானிலை ஆய்வு மையம் தகவல்! 

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று மாலை 4 மணியளவில் ஃபெங்கால் புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், நாகை முதல், காரைக்கால் , சென்னை வரையிலான கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. புயல் குறித்த தற்போதைய நிலவரத்தை இந்திய வானிலை ஆய்வு மண்டலம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த […]

#Chennai 4 Min Read
Weather Update in Tamilnadu

புயல் எங்கே கரையை கடக்கும்? ‘சென்னையை குறிவைக்கும் மழை’ தனியார் வானிலை ஆய்வாளர் அப்டேட்…

சென்னை : வங்கக் கடலில் உருவாக உள்ள புயல் பரங்கி – சென்னையை இடையே நவம்பர் 30இல் கரையைக் கடக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாள ர்பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருமாறலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை மாறிமாறி நகர்ந்து வந்ததால், அது எப்போது கரையை கடக்கும்? எங்கு கரையை […]

#Chennai 4 Min Read
TN Rains

36 மணிநேரம் ஒரே இடத்தில்., மிக கனமழை! தனியார் வானிலை ஆர்வலர் அப்டேட்!

சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து இன்று பிற்பகல் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த வானிலை நிலவரம் குறித்து இந்திய வானிலை மற்றும் சென்னை வானிலை மைய இயக்குனரகம் அவ்வப்போது தகவல் தெரிவித்து வந்தாலும், தனியார் வானிலை ஆர்வலர்களும் தற்போதைய வானிலை […]

Chennai Rains 4 Min Read
Cyclone Felgam

சென்னையில் நேற்று போல் இன்று (நவ.27) மழை இருக்காது – பிரதீப் ஜான் கணிப்பு!

சென்னை : வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி புயல் சின்னம் நாகப்பட்டினத்திற்கு தெற்கே-தென்கிழக்கே 420 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கே-தென்கிழகே 530 கிமீ தொலைவிலும் மத்திய இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் நிலவிவருகிறது. இந்த நிலையில், சென்னையில் நேற்று போல் இன்று (நவ.27) மழை இருக்காது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள […]

#Rain 3 Min Read
pradeep john - tn rain

இன்று உருவாகிறது ஃபெங்கால் புயல்.. வேகமாக நகர்ந்து வரும் புயல் சின்னம்!

சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில், கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சின்னம் தற்பொழுது, நாகப்பட்டினத்திற்கு தெற்கே – தென்கிழக்கே 420 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கே-தென்கிழகே 530 கிமீ தொலைவிலும் மத்திய இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் நிலவிவருகிறது. இது தொடர்ந்து வடக்கு […]

#BayofBengal 2 Min Read
Fengal_

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களின் லிஸ்ட்!

சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து இன்று (நவம்பர் 27ஆம் தேதி) சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் லிஸ்டை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், […]

#Rain 2 Min Read
rain fall

28-ஆம் தேதி வரை இந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! “ஆரஞ்சு அலர்ட்” கொடுத்த வானிலை மையம்!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த புயலுக்கு ஃபெங்கல் (Fengal) என்று பெயரிடப்படவுள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்திய அறிவிப்பில் தகவலை தெரிவித்திருந்தது. புயல் உருவான பிறகு அதற்கடுத்த இரு தினங்களில் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்பதால்  அடுத்த 4 முதல் 5 நாள்களுக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை […]

#Cyclone 4 Min Read
orange alert tn

ரெட் அலர்ட்: மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்.!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, புயல் உருமாறினால், அந்த புயலுக்கு ‘ஃபெங்கல்’ (Fengal) என்று பெயரிடப்படவுள்ளது. இதன் காரணமாக, இன்று (நவ்.26) முதல் 29 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 3 நாட்கள் மிக கனமழை பெய்யும் என […]

Chennai Meteorological Center 4 Min Read
Red Alert TN

நாளை உருவாகிறது ‘புயல்’… புயலுக்கு பெயர் ஃபெங்கல்.! எங்கு கரையை கடக்கும்?

சென்னை :  வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கல் (Fengal) என்று பெயரிடப்படவுள்ளது. தற்போது நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிகவும் மெதுவாக நகர்வதால் அடுத்த 4 முதல் 5 நாள்களுக்கு தமிழகத்தில் கனமழை இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் 29 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மற்றும் […]

#Cyclone 7 Min Read
Fengal Cyclone

வெளுத்து வாங்க போகும் மழை! 31 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலையாக உருவெடுக்கும் என முன்னதாக தெரிவித்திருந்தனர். மேலும், அது சென்னை இலங்கையை நோக்கி நகர்ந்து வந்துக் கொண்டிருக்கும் சூழலில் தமிழக்த்தில் தொடர்ந்து 4 முதல் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல, டெல்டா மாவட்டம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்று அறிவித்துள்ளனர். அதே போல இன்று மாலை 4 மணி வரை […]

Chennai Meteorological Center 4 Min Read
TN Weather Update

இந்த 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது.  இந்த காற்றழுத்த தாழ்வு மையம் வலுப்பெற்று நாளை புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியநிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக வரும் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வடக்கு – வடமேற்கு நோக்கி […]

Chennai Meteorological Center 3 Min Read
heavy rain

இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்… உருமாறியது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. நாகப்பட்டினத்திலிருந்து தெற்கே-தென்கிழக்கே 590 கிமீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 710 கிமீ தெற்கே-தென்கிழக்கே தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 800 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு […]

#Cyclone 4 Min Read
Southwest Bay of Bengal

சென்னையில் நாளை முதல் மழை சூடு பிடிக்கும் – வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவு!

சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இதனால், தமிழகத்தில் வரும் 30-ம் தேதி வரை மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், காற்றழுத்த தாழ்வு மையம் வடக்கு நோக்கி நகர்வதால் கடலோர மாவட்டங்களான சென்னை மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இன்று முதல் 4-5 நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார். […]

#Rain 3 Min Read
TN Weatherman Update

சென்னைக்கு அருகே 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் தாழ்வு மண்டலம் – வானிலை மையம் தகவல்!

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரங்களில் இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள அந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. […]

#Chennai 3 Min Read
Bay of Bengal

குடை எடுத்துக்கோங்க… இந்த 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு.!

சென்னை :  தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (அதாவது) இன்று காலை 10 மணிக்குள்ளாக மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, […]

#Chennai 2 Min Read
TN RAIN

ரெட் அலர்ட் எதிரொலி : இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, டெல்டா […]

#School Holiday 5 Min Read
School Leave

சென்னை, திருச்சி மாவட்டங்களில் 27-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு – பாலசந்திரன் பேட்டி!

சென்னை : வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் பேட்டியளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே சுமார் 880 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, […]

#Balachandran 4 Min Read
balachandran weather rain

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் […]

#Chennai 4 Min Read
rain update news today