இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது . டெல்லியில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு ,பிரதமர் மோடி , பிரேசில் அதிபர் மெசியாஸ் , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி , முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அட்டாரி-வாகா எல்லையில் ஒவ்வொரு நாளும் தேசியக் கொடியை இறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். தினமும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஆனால் குறிப்பாக சுதந்திரதினம் , குடியரசு தினம் போன்ற சிறப்பு வாய்ந்த நாள்களில் அட்டாரி-வாகா எல்லையில் தேசியக் கொடியை இறக்கும் நிகழ்ச்சியில் கூடுதலாக இருக்கைகள் அமைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த இரு நாள்களில் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகின்றனர்.
மேலும் பல இராணுவ அதிகாரிகள் மற்றும் பஞ்சாப் இராணுவ அதிகாரிகள் ,அமைச்சர்கள் என பலர் வருவதால் கூடுதல் இருக்கைகள் அமைக்கப்பட்டு ,இந்திய இராணுவ வீரர்களின் அணிவகுப்பு பார்க்கின்றனர்.இராணுவ வீரர்களின் அணிவகுப்பு பார்க்கவே கண்ணை கவரும் வகையில் இருக்கும். சுதந்திரதினம் , குடியரசு தினம் போன்ற நாள்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து வருகின்றனர்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…