ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்த தெரு நாய்!பின்னர் நடந்த விபரீதம்!

Published by
Sulai
  • ஆப்பரேசன் தியேட்டருக்குள் நுழைந்த தெரு நாய் பிறந்த குழந்தையை கடித்து கொதறியதில் குழந்தை மரணம்.
  • மருத்துவமனையின் கவன குறைவால் நேர்ந்த கொடுமையின் காரணமாக காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூரை அடுத்து உள்ள ஃபருகாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் ஆவார் .இவருடைய மனைவி காஞ்சன் ஆவார்.இவருக்கு சில நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக விகாஸ் காலனியில் உள்ள ஆகாஷ் கங்கா என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு காஞ்சனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு சுக பிரசவம் பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதற்கு ரவிக்குமார் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து பிரவத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பின்னர் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரவிக்குமார் ஒப்பு கொண்டுள்ளார்.பின்னர் காஞ்சன் ஆப்பரேசன் தியேட்டருக்கு மாற்றப்பட்டுள்ளார். பின்னர் மருத்துவர்கள் குழந்தை நலமாக பிறந்துள்ளதாக ரவிக்குமாரிடம் கூறியுள்ளனர்.

ஆனால் குழந்தை ஆப்பரேசன் தியேட்டரில் சில மணி நேரம் இருக்க வேண்டும் மனைவியை வேற வார்டுக்கு மாற்றலாம் என்று கூறியுள்ளனர்.இந்நிலையில் ஆப்பரேசன் தியேட்டரில் இருந்து  ஊழியர் ஒருவர் கத்திகொண்டே ஓடிவந்துள்ளார்.

இதனை கண்ட குழந்தையின் தந்தை ஓடி சென்று உள்ளே பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.அங்கு அவரது குழந்தை கை, முகம் ஆகியவற்றில் காயங்களுடன் ரத்தம் கசிந்த நிலையில் அசைவின்றி தரையில் விழுந்து கிடந்துள்ளது .

பின்னர் அங்கு ஒரு தெரு நாயும் இருந்துள்ளது.பின்னர் பதட்டமாகிய ரவிக்குமார் அங்கிருந்த ஊழியர்களை அழைத்துள்ளார்.பின்னர் சிலர் வந்து நாயை விரட்டி அடித்துள்ளனர்.அதன் பிறகு ரவிக்குமாரை ஆபரேஷன் தியேட்டருக்குள் மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

பின்னர் உங்கள் குழந்தை இன்னும் பிறக்கவில்லை, சத்தம் போடாதீர்கள் என பொய்யாக கூறி சமாதானப்படுத்தியுள்ளனர்.பின்னர் ரவிக்குமாரிடம் பேசிய மருத்துவமனை நிர்வாகம் இந்த விஷயத்தை வெளியில் கூறாதீர்கள் நாங்கள் பணம் தருகிறோம் என்று கூறியுள்ளனர்.

பின்னர் ஆத்திரம் அடைந்த ரவிக்குமார் மருத்துவமனையில் நடந்த இந்த கொடுமையை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் ஃபருகாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் ஆபரேஷன் தியேட்டர் ஊழியர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

“திமுகவை மக்களே வீழ்த்துவார்கள்”…பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!

“திமுகவை மக்களே வீழ்த்துவார்கள்”…பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!

மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…

11 hours ago

ஜூன் 10-ல் இந்த 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…

12 hours ago

விராட் கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு farewell நிகழ்ச்சி! ஆஸி கிரிக்கெட் வாரியம் திட்டம்!!

ஆஸ்திரேலியா :  கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…

12 hours ago

நாமக்கல் மக்களே…டேங்கர் லாரியில் இருந்தது சமையல் எண்ணெய் இல்லை! காவல்துறை விளக்கம்!

நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…

13 hours ago

கூட்டணி குறித்த கேள்வி! “சந்தோஷமான செய்தி விரைவில் வரும்” – ராமதாஸ் பதில்!

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…

14 hours ago

டோனால்ட் டிரம்ப் உடன் மோதல்…புதிய கட்சி தொடங்கிய எலான் மஸ்க்!

வாஷிங்டன் :  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…

16 hours ago