கேப்டன் அபிநந்தனுக்கு ‘வீர் சக்ரா விருது’ வழங்கிய குடியரசுத்தலைவர்!

Published by
Edison

பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக குரூப் கேப்டன் அபிநந்தன் அவர்களுக்கு,குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் இன்று ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி,ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலை படைத் தாக்குதலில்,40 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து,புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.அவ்வாறு,நடந்த வான்வழித் தாக்குதலின் போது பாகிஸ்தானின் F-16 ரக போர் விமானத்தை அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார்.ஆனால்,அதன்பின்னர்,அவரது விமானம் எதிரிப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டு,பாராசூட் மூலம் உயிர் தப்பிய அவர் பின்னர் பாகிஸ்தான் இராணுவத்தால் அவர் சிறைபிடிக்கப்பட்டார். அபிநந்தன் அப்போது விங் கமாண்டராக இருந்தார்.

இதனைத் தொடர்ந்து,இந்தியாவின் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு,அபிநந்தன் அவர்களை பேச்சுவார்த்தை மூலம் பாகிஸ்தான் திருப்பி அனுப்பியது.இதன்மூலம் மக்கள் மத்தியில் அபிநந்தன் மிகவும் பிரபலமானார்.இதனைத் தொடர்ந்து,அபிநந்தன் அவர்களுக்கு குரூப் கேப்டன் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில்,பிப்ரவரி 27, 2019 அன்று வான்வழிப் போரின் போது பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக குரூப் கேப்டன் அபிநந்தன் அவர்களுக்கு,குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் இந்திய ராணுவத்தின் மூன்றாவது மிக உயரிய விருதான ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டுள்ளது.

Recent Posts

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது வரலாற்றுப் புரட்சி – ஓ.பன்னீர்செல்வம்!பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது வரலாற்றுப் புரட்சி – ஓ.பன்னீர்செல்வம்!

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது வரலாற்றுப் புரட்சி – ஓ.பன்னீர்செல்வம்!

சென்னை : முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு, ஜெயலலிதாவின் 1998-ல் பாஜக ஆட்சியைக் கவிழ்க்க எடுத்த முடிவு “வரலாற்றுப்…

1 hour ago
வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார்! வழக்குப்பதிவு செய்த போலீசார்!வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார்! வழக்குப்பதிவு செய்த போலீசார்!

வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார்! வழக்குப்பதிவு செய்த போலீசார்!

கொச்சி : கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் (எ) ஹிரந்தாஸ் முரளி மீது, இளம்பெண் மருத்துவர் ஒருவர்…

2 hours ago
INDvsENG : தொடரை சமன் செய்யுமா இந்தியா..இன்று 5-வது டெஸ்ட் போட்டி!INDvsENG : தொடரை சமன் செய்யுமா இந்தியா..இன்று 5-வது டெஸ்ட் போட்டி!

INDvsENG : தொடரை சமன் செய்யுமா இந்தியா..இன்று 5-வது டெஸ்ட் போட்டி!

லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 31,…

3 hours ago

ஆக 2 முதல் 5 வரை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம்…

3 hours ago

நடப்பு நிதியாண்டில் 9 ராக்கெட்கள் ஏவ திட்டம்- இஸ்ரோ தலைவர் நாராயணன் முக்கிய தகவல்!

சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் வி. நாராயணன், நடப்பு நிதியாண்டில் (2025-26) 9 முக்கிய…

3 hours ago

இந்தியாவுக்கு கூடுதலாக அபராதம் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இந்தியாவுக்கு எதிரான புதிய வரி மற்றும்…

3 hours ago