#Breaking:”தேர்தல் பிஸியில் இருக்கும் பிரதமர் மோடிக்கு மக்களின் உயிரைப் பற்றி அக்கறை இல்லை”- காங்கிரஸ் தலைவர் கடும் விமர்சனம்..!

Published by
Edison

மேற்கு வங்க தேர்தல் பணிகளில் பிசியாக இருக்கும் பிரதமர் மோடிக்கு,கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாட்டு மக்களின் உயிரைப் பற்றி அக்கறை இல்லை என்று காங்கிரஸ் தலைவர் நானா படோலே கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2 வது அலையின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.கொரோனா வைரஸினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்,மேலும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது.இதற்கு இடையில் கேரளா,தமிழ்நாடு,புதுச்சேரி,அசாம் மாநிலங்களில் சட்ட சபை தேர்தல் முடிவடைந்துள்ளன,மேலும் வாக்குப்பதிவானது மே 2 ஆம் தேதியன்று எண்ணப்படும்.

ஆனால்,மேற்கு வங்கத்தில்,294 தொகுதிகளில் 8 கட்டங்களாக மாநில சட்ட சபை தேர்தலானது நடைபெறுகிறது.இதில் முதல் 4 கட்ட தேர்தல் முடிவடைந்து பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.மேலும் தேர்தலில் 5 ஆம் கட்ட தேர்தலானது ஏப்ரல் 17 இல் நடைபெற உள்ள நிலையில்,வாக்குப்பதிவிற்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி குறித்து,மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியாதவது:”கொரோனா வைரஸ் தொற்றானது நாடு முழுவதும் அதிகமாக பரவி வருவது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கைகள் அதிர்ச்சியளிக்கின்றன.ஆனால்,பிரதமர் மோடியோ தற்போது மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருக்கிறார்.அவருக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் மக்களின் உயிர்களைப் பற்றி கவலை இல்லை.மேற்கு வங்க தேர்தலை முடித்த பிறகுதான் பிரதமர் மோடி நாடு தழுவிய முழு ஊரடங்கை அறிவிப்பார்”,எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Published by
Edison

Recent Posts

FIFA கிளப் உலகக் கோப்பை 2025: சாம்பியன் பட்டத்தை வென்ற செல்சியா எஃப்சி!

FIFA கிளப் உலகக் கோப்பை 2025: சாம்பியன் பட்டத்தை வென்ற செல்சியா எஃப்சி!

பாரிஸ்  : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…

12 minutes ago

நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…

37 minutes ago

“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!

டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…

2 hours ago

தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…

3 hours ago

உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…

3 hours ago

விம்பிள்டன் 2025 : சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சின்னர்! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…

4 hours ago