மேற்கு வங்க தேர்தல் பணிகளில் பிசியாக இருக்கும் பிரதமர் மோடிக்கு,கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாட்டு மக்களின் உயிரைப் பற்றி அக்கறை இல்லை என்று காங்கிரஸ் தலைவர் நானா படோலே கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா 2 வது அலையின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.கொரோனா வைரஸினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்,மேலும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது.இதற்கு இடையில் கேரளா,தமிழ்நாடு,புதுச்சேரி,அசாம் மாநிலங்களில் சட்ட சபை தேர்தல் முடிவடைந்துள்ளன,மேலும் வாக்குப்பதிவானது மே 2 ஆம் தேதியன்று எண்ணப்படும்.
ஆனால்,மேற்கு வங்கத்தில்,294 தொகுதிகளில் 8 கட்டங்களாக மாநில சட்ட சபை தேர்தலானது நடைபெறுகிறது.இதில் முதல் 4 கட்ட தேர்தல் முடிவடைந்து பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.மேலும் தேர்தலில் 5 ஆம் கட்ட தேர்தலானது ஏப்ரல் 17 இல் நடைபெற உள்ள நிலையில்,வாக்குப்பதிவிற்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி குறித்து,மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியாதவது:”கொரோனா வைரஸ் தொற்றானது நாடு முழுவதும் அதிகமாக பரவி வருவது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கைகள் அதிர்ச்சியளிக்கின்றன.ஆனால்,பிரதமர் மோடியோ தற்போது மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருக்கிறார்.அவருக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் மக்களின் உயிர்களைப் பற்றி கவலை இல்லை.மேற்கு வங்க தேர்தலை முடித்த பிறகுதான் பிரதமர் மோடி நாடு தழுவிய முழு ஊரடங்கை அறிவிப்பார்”,எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…