ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை தரவில்லை என்றால் தகுந்த பதிலடி காத்திருக்கும்…. இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா….

Published by
Kaliraj

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தடுப்பு மருந்தாக ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்தது.இதனையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும்,மருத்துவ ஊழியர்கள் கரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ரோகுளோரோகுயினை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்தன. எனவே இந்த அறிவிப்பை அடுத்து ஹைட்ரோகுளோரோகுயின் மருந்துகளின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், இந்த தடைகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசியுள்ளார். அந்த உரையாடலில்,   இருநாடுகளில் நிலவும் கொரோனா நிலவரம் குறித்தும் இருவரும் விவாதித்துள்ளனர்.  மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  இந்திய பிரதமர் மோடியிடம், இந்தியா ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்துக்கு விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி தடைக்கு  அமெரிக்காவுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார். இதற்கு, பரிசீலித்து உரிய முடிவெடுப்பதாக மோடி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், மோடியிடம் பேசுகையில் அமெரிக்க பொருள்கள் வெளிவருவதற்கு அனுமதித்ததற்கு நன்றி தெரிவித்தேன். அதேபோல், அவர்கள் மருந்துப் பொருள்கள் வெளி வருவதற்கு உதவவில்லை என்றால், அமெரிக்காவிற்கு  ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால், நிச்சயமாக இதற்கு  ஒரு பதிலடி இருக்கலாம்” என்று கூறினார். இந்நிலையில் அமெரிக்க அதிபர்  ட்ரம்ப்  முதிர்ச்சியில்லாமல் பேசியுள்ள இந்த பேச்சு  உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும், கொரோனா அச்சுறுத்தல் தற்போது உள்ள சூழ்நிலையில், மனிதநேய அடிப்படையில்,  மருந்தை தேவையான அளவு, நம்மை சார்ந்துள்ள அண்டை நாடுகளுக்கு, தேவைப்படும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்குவது என இந்தியா முடிவு செய்துள்ளது. கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில நாடுகளுக்கு இந்த அத்யாவசிய மருந்தை நாம் வழங்குவோம். இந்த விவகாரத்தில் யூகத்தை கிளப்பவும், அரசியலாக்குவதையும் அனுமதிக்க முடியாது. கொரோனா அச்சுறுத்தல் உள்ள சூழ்நிலையில், சர்வதேச நாடுகள் வலிமையான ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையை வழங்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

4 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

5 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

6 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

6 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

7 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

7 hours ago