மும்பையில் உள்ள தனியார் கொரோனா மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 35,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அம்மாநிலத்தில் விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில், ட்ரீம்ஸ் மால் சன்ரைஸ் மருத்துவமனை கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அப்பொழுது திடீரென இரவு 12:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைக்க 22 வாகனங்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் இதுவரை தெரிவிக்கவில்லை. இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மருத்துவமனையில் இருந்த அனைத்து நோயாளிகளையும் உடனடியாக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். தீயை அணைக்கும் பணியிலும், மருத்துவமனையில் இருந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினரும், காவல்துறையினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…