சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு வந்த 10 பெண்கள் கேரள போலீசாரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்!

Published by
மணிகண்டன்

கேரள சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மணடலபூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இதனை அடுத்து, இன்று பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் அதிகமாக இருந்தது. இன்று முதல் மகர ஜோதி தரிசனம் வரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீதான தீர்ப்பு 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டதால், ஏற்கனவே உள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பான அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்கிற நிலை தொடருகிறது.
இதனையடுத்து இன்று முதல் நாளே ஆந்திராவை சேர்ந்த 10 நடுத்தர வயது பெண்கள் ஐயப்பனை தரிசிக்க சென்றனர். ஆனால் அவர்களிடம் கேரள போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.
கேரளா மாநிலம் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், ‘ சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் அனைத்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது. நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்க முடியும் என கூறியுள்ளார். மேலும், புரட்சி செய்வதற்கான இடம் சபரிமலை இல்லை  எனவும் தனது கருத்தை தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

51 minutes ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

2 hours ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

3 hours ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

4 hours ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

4 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

4 hours ago