Categories: இந்தியா

வினாத்தாளை கசியவிடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம்!

Published by
கெளதம்

பீகார் : பீகார் மாநில சட்டசபையில், அரசு ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் மசோதாவை நிறைவேற்றியது.

போட்டித் தேர்வு மற்றும் அரசுப் பணியாளர் தேர்வில் வினாத்தாளை கசியவிடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கு இடையே மாநில நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி இந்த சட்டத்தை முன்வைத்தார்.

நீட் வினாத்தாள் கசிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பீகார் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பீகார் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் விதிகளின்படி, அரசு நிறுவனங்களால் நடத்தப்படும் அனைத்து போட்டி ஆட்சேர்ப்பு மற்றும் நுழைவுத் தேர்வுகள் அதன் ஆணையின் கீழ் வரும்.

அதன்படி, பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், பீகார் யுனிவர்சிட்டி சர்வீஸ் கமிஷன், பீகார் ஸ்டாஃப் சர்வீஸ் கமிஷன், பீகார் டெக்னிக்கல் சர்வீசஸ் கமிஷன், சென்ட்ரல் செலக்ஷன் போர்டு ஆஃப் கான்ஸ்டபிள்ஸ், பீகார் போலீஸ் சப்-ஆர்டினேட் சர்வீசஸ் கமிஷன் மற்றும் பிற அறிவிக்கப்பட்ட அதிகாரிகள் மசோதாவின் கட்டளையின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (பிபிஎஸ்சி) ஆசிரியர் ஆட்சேர்ப்புத் தேர்வின் போது தாள் கசிவுக்கான செய்திகளில் வந்த நிலையில், தேர்வு பிபிஎஸ்சியால் ரத்து செய்யப்பட்டு, இந்த மாதம் மீண்டும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

LSG vs SRH : பேட்டிங்கில் மிரட்டிய லக்னோ.., ஹைதராபாத்துக்கு இமாலய இலக்கு.!

லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…

28 minutes ago

”விஷாலுடன் ஆகஸ்டு 29 ஆம் தேதி திருமணம்” – மேடையில் அறிவித்த சாய் தன்ஷிகா.!

சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…

48 minutes ago

சாய் தன்ஷிகாவை கரம் பிடிக்கும் நடிகர் விஷால்.! மேடையில் போட்டுடைத்த இயக்குநர்.!

சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…

2 hours ago

தாக்குதலில் இந்தியாவின் விமானங்கள் எத்தனை சேதமடைந்தன? விக்ரம் மிஸ்ரி கூறியது என்ன?

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…

2 hours ago

LSG vs SRH : லக்னோவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு.? ஹைதராபாத் அணி பந்துவீச்சு.!

லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…

3 hours ago

“சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு”- முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு.!

சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…

3 hours ago