கனமழையால் தெலுங்கானா மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிகரித்துள்ளதால், ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில், தெலுங்கானாவின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆந்திரா தெலுங்கானா ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் மழை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தற்பொழுது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவின் டோலி சவுக்கி எனும் பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வீடுகள் சேதம் அடைந்து, வீடுகளில் மழை நீர் புகுந்ததால் தலைமை செயலாளர் சுரேஷ்குமார் அவர்கள், எம்பிக்கள் போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட கலெக்டர் எப்பொழுதும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 சென்டிமீட்டர் மழை தெலுங்கானாவில் பெய்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலம் வடமேற்கு திசை நோக்கி நகர உள்ளதால் மழையின் தாக்கம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…