மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சார்ந்தவர் நீரஜ் மால்வியா. இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் மணமகன் நீரஜ் மால்வியா நேற்று திடீரென தனது வீட்டில் இருந்து மண்டபத்திற்கு ஒடி வந்து உள்ளார்.
நீரஜ் மால்வியா மண்டபத்திற்கு ஒடி வந்ததால் அவரின் பின்னால் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் ஓடி வந்துஉள்ளனர். இதனை பார்த்த மற்றவர்கள் நீரஜ் மால்வியா எதையோ திருடிக்கொண்டுதான் ஓடுகிறார் என நினைத்து கொண்டனர்.
பின்னர் மண்டபத்திற்கு சென்று மணமகளுக்கு தாலி கட்டினார்.திருமணம் முடிந்த பிறகு இதுகுறித்து அவரிடம் கேட்டபோது , உடற்பயிற்சி பயிற்சியாளரான நான் விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஜாக்கிங் செல்வது போல் ஓடினேன் என கூறினார்.
இதுகுறித்து மணமகளின் தந்தை கூறுகையில் எனது மாப்பிள்ளையை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. ஆரோக்கியத்தின் விழிப்புணர்விற்காக அவர் இவ்வாறு செய்தார் என கூறினார்.அவரின் வீட்டிற்கும் திருமண மண்டபத்திற்கும் 11 கிலோமீட்டர் தூரம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…