இனிமேல் பொது இடத்தில் எச்சில் துப்பினால் 1,200 ரூபாய் அபராதம்!

Published by
Rebekal

இனிமேல் பொது இடத்தில் எச்சில் துப்புபவர்களுக்கு 1200 ரூபாய் அபராதமாக வசூலிக்க மும்பை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாம்.

மும்பை மாநகராட்சியில் ஏற்கனவே பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில் இந்த அபராத தொகையை 1200 ஆக அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ள நிலையில் இது குறித்து கமிஷனர் இக்பால் அண்மையில் ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. எனவே இனிமேல் மும்பை மாநகராட்சியில் பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்கள் மீது 1200 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது.

இருப்பினும் இந்தத் திட்டத்திற்கு மாநகராட்சி பொது குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். அவ்வாறு அதிகாரப்பூர்வமாக அளித்தால் இனிமேல் பொது இடங்களில் அத்து மீறுபவர்கள் மீது ஆயிரத்து இருநூறு ரூபாய் அபராதமாக விதிக்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே இதுவரை மும்பை மாநகராட்சியில் பொது இடங்களில் எச்சில் துப்பியவர்கள் மீது 200 ரூபாய் வசூலித்ததில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாம்.

Published by
Rebekal

Recent Posts

ரோஹித் – கோலி ஓய்வு பெற அழுத்தம் கொடுக்கப்பட்டதா? விளக்கம் கொடுத்த பிசிசிஐ!

ரோஹித் – கோலி ஓய்வு பெற அழுத்தம் கொடுக்கப்பட்டதா? விளக்கம் கொடுத்த பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…

24 minutes ago

யூடியூப் புதிய விதிகள் : தரமற்ற வீடியோக்களுக்கு இனி காசு இல்லை!

யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது.  இதில் பலர்…

1 hour ago

’பென்ஸ்’ பட ஒளிப்பதிவாளரை திருமணம் செய்யப்போகும் நடிகை தான்யா!

சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…

2 hours ago

த.வெ.கவின் அடுத்த டார்கெட்…கோலாகலமாக நடந்த 2வது மாநாடு பந்தக்கால் நடும் விழா!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…

3 hours ago

நிமிஷா பிரியா வழக்கு : “ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சி” – ஏ.பி.அபூபக்கர்!

டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…

3 hours ago

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…இன்று 2 மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…

3 hours ago