rain - Telangana [file image]
தெலுங்கானா : நகர்கர்னூல், விகாராபாத், காமரெட்டி மற்றும் யாதாத்ரி-புவனகிரி மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் பல பகுதிகளில் நேற்றைய தினம் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசியதில், தனித்தனி இடங்களில் 14 பேர் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தாக கூறப்படுகிறது.
நாகர்கர்னூல் மாவட்டம் தண்டூரில் கட்டுமானப் பணியின் கீழ் இருந்த பால் பண்ணையின் சுவர் இடிந்து விழுந்ததில் 10 வயது சிறுமி உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், நாகர்கர்னூல் மாவட்டத்தின் வெவ்வேறு மண்டலங்களில் மின்னல் மூவர் உயிரிழந்தனர்.
இதனிடையே, சித்திப்பேட்டை மாவட்டம் முலுகு மண்டலத்தில் உள்ள க்ஷிராசாகரில் கோழிப்பண்ணையின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். மேலு, மேட்சல் மாவட்டம் கீசராவில் நடந்த மற்றொரு சம்பவத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மரம் விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…