பீகார் மாநிலத்தில் தந்தையால் தொடர்ந்து வேலை செய்ய முடியாததால் ஊரடங்கு நேரத்திலும் ரிக்க்ஷாவை ஓட்டி குடும்பத்தை கவனித்து வரும் 14 வயது சிறுமியின் செயல் வியக்க வைக்கிறது.
கொரானா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதுமே அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஆறு மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பீகார் மாநிலம் சசாரம் என்னும் மாவட்டத்தில் தொடர்ந்து இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் சூழலில் தனது தந்தையால் வேலை செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் நந்தினி குமாரி எனும் 14 வயது சிறுமி தானே தனது தந்தையின் வாடகை ரிக்ஷாவை அழுத்தி பயணிகளை ஏற்றி குடும்பத்திற்கு செலவு பணத்தை உழைத்து கொடுக்கிறாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஊரடங்கு நேரத்தில் எனது தந்தையே நான் ரிக்ஷ ஓட்ட அனுமதிக்கவில்லை, ஏனென்றால் காவல் துறையினருக்கு பயமாக உள்ளது, அதனால் தான் அதற்கு பதிலாக நானே அவரது வேலையை ஒரு மாதமாக செய்கிறேன் என அவர் கூறியுள்ளார். மேலும் அவர் தினசரி கூலியாக தற்பொழுது வேலை செய்து வருகிறாராம். 12 மணிநேரம் வேலை செய்வதாகவும், ஒரு நாளில் 100 முதல் 200 ரூபாய் வரை சம்பாதிப்பதாகவும் நந்தினி கூறியுள்ளார்.
படிக்காத பெண் என்றாலும் அனைத்து விதிகளையும் பின்பற்றக்கூடிய கெட்டிக்கார சிறுமியாக இவர் உள்ளாராம். எந்த இடத்துக்கு போக வேண்டும் என்று கூறினாலும் அதன் பாதைகளையும் வழிகளையும் நன்கு அறிந்தவராக இவர் உள்ளாராம். மேலும் ஆண்கள் ஓட்டக்கூடிய ரிக்ஷாவை விடத்தான் ஓட்டக்கூடிய ரிக்ஷாவில் பயணிக்க பெண்கள் அதிகம் விரும்புவதாகவும், அவர்களுடைய தைரியம் மற்றும் மனக் கவலையால் அதிகம் பேர் ஈர்க்கப்பட்டு இவள் ரிக்ஷாவிற்கு தான் வருகிறார்கள் எனவும் அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் கூறியுள்ளனர் .
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…