Bomb Thread in bengaloere schools [File Image]
பெங்களூருவில் செயல்பட்டு முக்கிய சுமார் 15 பள்ளிகளில் இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இமெயில் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டலானது கிடைக்கப்பெற்றது. இதனை அடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர், முதற்கட்டமாக அனைத்து பள்ளி மாணவர்களையும் பள்ளிகளில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன் பிறகு, தற்போது குறிப்பிட்ட பள்ளிகளில் வெடிகுண்டு சோதனையாளார்கள் பள்ளிகளில் அனைத்து இடங்களிலும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 15 தனியார் பள்ளிகளில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரலை.. ஒடிசா அரசு அதிரடி முடிவு!
இதற்கு முன்னதாக , கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி இதே போல வெடிகுண்டு மிரட்டல் பெங்களூரு பள்ளிகளுக்கு வந்தது. இதனை விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என குறிப்பிடப்பட்ட அந்த இமெயில் பின்புறம் தமிழகத்தை சேர்ந்த ஒரு பதின்ம வயது இளைஞர் இருந்தது தெரியவந்தது.
அதே போல தற்போதும் அந்த இமெயில் அனுப்பியது யார் என்ற விவரத்தை கண்டறியவும் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். விரைவில் மிரட்டல் விடுத்த நபர் யார் என்ற விவரம் தெரியவரும் என பெங்களூரு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…