சகோதரன் முன்பு 4 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட 15 வயது சிறுமி – 3 பேர் கைது!

Published by
Rebekal

உத்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை அண்டை வீட்டை சேர்ந்த 4 பேர், அவளது 12 வயது தம்பி முன்பு வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர் நகரில் 15 வயது சிறுமி தனது 12 வயது தம்பியுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அவர்களது பெற்றோர்கள் வேறு ஒரு கிராமத்தில் நடந்த விழா ஒன்றிற்காக வெளியே சென்றிருந்துள்ளனர். அந்த சமயம் பக்கத்து வீட்டுக்காரர்கள் சிலர் அவர்களது வீட்டுக்குள் நுழைந்து குழந்தைகள் இருவரும் தூங்குவதை கண்ட பின்பும், அந்த 15 வயது சிறுமியை 12 வயது சகோதரன் முன்னிலையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொடுத்துள்ள புகாரில் தாங்கள் வெளியே சென்றிருக்கும் நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும், அவளது சகோதரனை துப்பாக்கி முனையில் வைத்திருந்ததாகவும், சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என்று அச்சுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு வெளியில் இதைப் பற்றி கூறினால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டியதாகவும் சிறுமியின் தந்தை தனது புகாரில் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின்பு பெற்றோர்கள் வருவதைக் கண்ட சிறுவன் ஓடி சென்று தனது சகோதரிக்கு நடந்ததை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து தான்  பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்ததில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நான்காவது நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

23 minutes ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

48 minutes ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

2 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

10 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

10 hours ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

12 hours ago