அசாமில், நாகான் மாவட்டத்தில் 18 யானைகள் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
அசாமில், நாகான் மாவட்டத்தில் 18 யானைகள் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் புதன்கிழமை இரவு நடந்துள்ளது. ஆனால் வனத்துறையினருக்கு வியாழக்கிழமை இரவுதான் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று பார்த்துள்ளனர்.
இதுகுறித்து கதியாடோலி வனச்சரகத்தில் தலைமை வன காப்பாளர் அமித் ஷாகே அவர்கள் கூறுகையில், அசாமின் எல்லைப்பகுதியான நாகான்-கார்பி ஆங்லாங் எல்லையில், இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. புதன்கிழமை இரவு அங்கு இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. அப்போது இரண்டு கூட்டங்களாக இருந்த 18 யானைகள் இறந்துள்ளன. ஆனால் எங்களுக்கு நேற்றுதான் தகவல் கிடைத்தது.
14 யானைகள் வனப் பகுதியின் மேல் பகுதியிலும், நான்கு யானைகள் வனப் பகுதியின் கீழ் பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். முதல்கட்ட விசாரணையில் மின்னல் தாக்கி அதில் இருந்து வந்த அதிக மின்னழுத்தம் மூலம் யானை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் யானை உடற்கூறு ஆய்வு செய்த பின் தான் இது குறித்து உண்மையான காரணங்கள் தெரியவரும் என்றும், இதுகுறித்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், யானைகள் பொதுவாக மழைக்காலத்தில் பெரிய மரங்களின் கீழ் கூட்டமாக நிற்கும். அவ்வாறு நின்று கொண்டிருக்கும்போது மரத்தில் மின்னல் தாக்கி இருக்கலாம் .மின்னல் அதிக சக்தியுடன் தாக்கும்போது கூட்டமாக யானைகள் இறக்க வாய்ப்புள்ளது என்றும், உயிரிழந்த யானைகளில் எத்தனை ஆண் யானைகள், பெண்யானைகள் மற்றும் எத்தனை பெண் யானைகள் கர்ப்பமாக இருக்கும் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…