குஜராத்தில் அடுத்தடுத்து 19 முறை நிலநடுக்கம்…! அதிர்ச்சியில் மக்கள்..!

Published by
murugan

குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் காலை வரை 1.7 முதல் 3.3 ரிக்டர் அளவிலான 19 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எந்தவொரு உயிரிழப்பு  அல்லது பொருட்சேதம் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

காந்திநகரத்தை தளமாகக் கொண்ட நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.எஸ்.ஆர்) ஒரு மூத்த அதிகாரி இந்த நிகழ்வுகளை “பருவமழையால் ஏற்பட்டநில அதிர்வு” என்று கூறினார். பொதுவாக குஜராத்தின் சவுராஷ்டிரா பிராந்தியத்தின் ஒரு சில பகுதிகளில் இரண்டு மூன்று மாதங்கள் பெய்த கனமழையால் இது ஏற்பட்டது, கவலைப்பட எதுவும் இல்லை என்று கூறினார்.

அதிகாலை 1.42 மணி முதல், 19 நிலநடுக்கங்கள், 1.7 முதல் 3.3 வரை ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுராஷ்டிராவின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள தலாலாவின் கிழக்கு-வடகிழக்கு (ENE) மையப்பகுதிகளில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கங்களில் பெரும்பாலானவை 3 ரிக்டர் அளவில் குறைவானவை என்றாலும், 6 நிலநடுக்கம்  3 -க்கும் மேற்பட்ட ரிக்டர் அளவில் பதிவாகியது. இதில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அதிகாலை 3.46 மணிக்கு பதிவாகியுள்ளது. அதன் மையப்பகுதி 12 கி.மீ. இல் இருந்தது.

3.2 ரிக்டர் அளவிலான சமீபத்திய நிலநடுக்கம் காலை 9.26 மணியளவில் தலாலாவின் 11 கி.மீ மையப்பகுதியில் உணரப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

 

 

 

Published by
murugan

Recent Posts

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

2 minutes ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

44 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

2 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

4 hours ago