ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த 63 வயதுடைய குமாரி நாயக் என்ற மூதாட்டிக்கு பாலிடாக்டைலிசம் என்ற அரியவகை நோய் தாக்கியதில், 19 கால் விரல்கள் மற்றும் 12 கை விரல்கள் அவரது உடலில் முளைத்தன. இதனால் அவரை பார்த்து ஊர் மக்கள் பயந்து, அவரை சூனியக்காரி என தவறாக புரிந்து கொண்டு ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். பின்னர் ஊரே தன்னை ஒதுக்கியதால் தனிமையில் மூதாட்டி வாழ்ந்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் மூதாட்டியை கின்னஸ் சாதனை புத்தகம் தற்போது அங்கீகரித்துள்ளது.
ஏற்கனவே 14 கால் விரல்கள் மற்றும் 14 கை விரல்கள் கொண்ட குஜராத்தின் தேவேந்திர சுதர் என்பவரின் கின்னஸ் சாதனையை இந்த மூதாட்டி குமாரி நாயக் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கின்னஸ் சாதனை புத்தகத்தால் தற்போது வெளி உலகத்திற்கு தெரிய வந்த மூதாட்டி குமாரி நாயக்கை சந்தித்த அரசு அதிகாரிகள், அவருக்கு முறையான சிகிச்சை மற்றும் உதவி தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்கள். இவ்வளவு நாள் எந்த ஊர் அந்த மூதாட்டியை ஒதுக்கி வைத்ததோ அவர்களே தற்போது மூதாட்டியை வந்து பார்த்து அவருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.
சென்னை : தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, இன்று (ஜூன் 2, 2025) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த…
சென்னை : தமிழ் திரையுலகில் மதயானைக் கூட்டம் மற்றும் ராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் விக்ரம்…
அகமதாபாத் : 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பெங்களூர் அணிக்கு எதிரான முதல் தகுதிச்சுற்று போட்டியில் விளையாடியபோது…
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…