பைனலுக்குள் நுழைந்த பஞ்சாப்…மும்பை தோல்விக்கான முக்கிய காரணங்கள்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது தகுதி சுற்றுப்போட்டியில் பஞ்சாப் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Punjab Kings vs Mumbai Indians

அகமதாபாத் : 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பெங்களூர் அணிக்கு எதிரான முதல் தகுதிச்சுற்று போட்டியில் விளையாடியபோது தோல்வியடைந்தது. அதனை தொடர்ந்து நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற தகுதிச் சுற்று 2ல் மும்பை இந்தியன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து, 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி நாங்கள் பந்துவீச்சை தேர்வு செய்கிறோம் என மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. எனவே, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி தொடக்கத்திலே கொஞ்சம் தடுமாறியது என்று சொல்லலாம். அதற்கு முக்கிய காரணமே அணியின் தூணாக இருக்கும் ரோஹித் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

அவர் ஆட்டமிழந்தபிறகு திலக் & பேர்ஸ்டோவ் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினார்கள் என்று கூறலாம். இவர்களுடைய அதிரடி ஆட்டம் காரணமாக பவர்பிளே ஓவர்களில் மும்பை அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. பிறகு பேர்ஸ்டோவ் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், அடுத்ததாக சூர்யகுமார் யாதவ் திலக் வர்மாவுடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்து சிறப்பாக விளையாடினார்கள்.

பிறகு இருவருமே 44 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில் கடைசி நேரத்தில் மும்பை தடுமாறியது. ஹார்டிக் பாண்டியா 15, நமன் திர் 37 ஆகியோர் கடைசி நேரத்தில் ரன்கள் எடுத்த காரணத்தால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது.

அடுத்ததாக 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் கூட அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 87* கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றிப்பாதைக்கு எடுத்துச்சென்றார். அதைப்போல ஜோஷ் இங்கிலிஸ் 38, நேஹால் வதேரா 48 ரன் எடுத்து சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர்.

பஞ்சாப் அணியின் நிதானம் கலந்த அதிரடி ஆட்டம் காரணமாக மும்பை அணி 19 ஓவர்களில் 207 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வரும் ஜூன் 3 -ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.

மும்பை இந்தியன்ஸ் தோல்விக்கு முக்கிய காரணங்கள்

ஆரம்பத்தில் விக்கெட் இழப்பு: மும்பை இந்தியன்ஸ் ஆரம்பத்தில் விரைவாக முக்கிய விக்கெட்டுகளை இழந்து. உதாரணமாக ரோஹித் சர்மா விக்கெட்டை பஞ்சாப் அணி தூக்கியது வழக்கமாக மும்பை அணிக்கு கிடைக்கும் தொடக்க கிடைக்கவில்லை.

திலக் & சூர்யா ஜோடி அவுட் : போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த திலக் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நேரத்தில் ஆட்டமிழந்தது தான் அணிக்கு பெரிய பின்னடைவு. 13 ஓவரில் சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் விளாச முயன்று 44 ரன்களுக்கு வெளியேறினார். அவருக்கு அடுத்ததாக அடுத்த ஓவரில் திலக் வர்மாவும் அதைப்போல ஒரு ஷார்ட் விளையாட முயன்று அவரும் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் அந்த நேரத்தில் மும்பை தடுமாறியது.

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோசமான பதிவு: மும்பை இந்தியன்ஸ் கடந்த 11 ஆண்டுகளில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த மோசமான பதிவு அவர்களின் மனநிலையை பாதித்திருக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்