PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப் போட்டி.., வெல்லப்போவது யார்? டாஸ் – பிளேயிங் லெவன் இதோ.!

ஐபிஎல் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. பஞ்சாப் அணி டாஸ் வென்றவுடன் அந்த அணிக்கு ஆதரவாக ரசிகர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.

RCBvPBKS

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விரைவில் தொடங்க போகிறது. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.

தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால், முதலில் பெங்களூரு அணி அணி பேட்டிங் செய்ய போகிறது. ஐபிஎல் கோப்பை கனவுடன் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் மல்லுக்கட்டும் நிலையில், பஞ்சாப் அணி டாஸ் வென்றவுடன் அந்த அணிக்கு ஆதரவாக ரசிகர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர். 

பஞ்சாப் கிங்ஸ் :

கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணியில், பிரியான்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ், நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மதுல்லா ஓமர்சாய், கைல் ஜேமிசன், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு :

கேப்டன் ரஜத் படிதார் தலைமையிலான அணியில், பிலிப் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்ம, ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அகமதாபாத் மைதானத்தில் எங்கு பார்த்தாலும் மூவர்ணக் கொடியே மிளிர்கிறது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து ராணுவத்தை கௌரவிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதே போல் விண்ணிலும், போர் விமானங்கள் மூவர்ண புகையை வெளிப்படுத்தி பறந்தது ரசிகர்களை பரவசமடைய வைத்தது.

மைதானத்திற்குள் இருந்த ரசிகர்களும் தங்களது அணியின் கொடியுடன், தேசியகொடியையும் ஏந்தியிருந்தனர். ஆர்சிபி அல்லது பஞ்சாபின் கோப்பையை வெல்லும் கனவு 18 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முடிவுக்கு வருகிறது. இருவரும் இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெல்லவில்லை.

குவாலிஃபையர்-1 இல் பஞ்சாப்பை வீழ்த்தி ஆர்சிபி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இது ஆர்சிபியின் நான்காவது இறுதிப் போட்டி ஆகும். பெங்களூரு அணி 9 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

அதே நேரத்தில், குவாலிஃபையர்-2ல் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இது பஞ்சாப் அணியின் இரண்டாவது இறுதிப் போட்டி ஆகும். பஞ்சாப் அணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்