2014-இல் 2;பாஜக ஆட்சியில்-1…காங்.எம்பி ராகுல் காந்தி கடும் கண்டனம்!

Published by
Edison

கடந்த மே 1 ஆம் தேதி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள்  ரூ.2253 இல் இருந்து ரூ.102.50 உயர்த்தின.இதனால்,வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் தற்போது ரூ.2355.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல,5 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை தற்போது 655 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனையடுத்து,வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடைகொண்ட கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று ரூ.50 உயர்த்தின.இதனால்,சிலிண்டர் விலை ரூ.965 லிருந்து ரூ.1015 ஆக உயர்ந்துள்ளது.இது கடந்த ஆறு வாரங்களுக்குள் இரண்டாவது விலை உயர்வு ஆகும்.ஏற்கனவே பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில்,வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,2014 ஆம் ஆண்டில் 2 சிலிண்டர் வாங்கும் அளவுக்கு பணம் இருந்த நிலையில்,தற்போது அதே அளவு பணம் 1 சிலிண்டர் வாங்குவதற்கு மட்டுமே போதுமானதாக உள்ளது என்று மத்திய அரசை கண்டித்து ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:

2014 இல் காங்கிரஸ் ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.410  ஆக இருந்த நிலையில்,மானியம் ரூ.827 வழங்கப்பட்டது.ஆனால்,தற்போது (2022) பாஜக ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.999 ஆக உயர்ந்துள்ளது.ஆனால்,       சிலிண்டருக்கு மானியம் தரப்படுவதில்லை.இதனால்,காங்கிரஸ் ஆட்சியில் 2 சிலிண்டர்கள் வாங்குவதற்கான தொகை,தற்போது 1 சிலிண்டர் வாங்க மட்டுமே போதுமானதாக உள்ளது”,என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும்,ஏழை மற்றும் நடுத்தர இந்திய குடும்பங்களின் நலனுக்காக காங்கிரஸ் மட்டுமே ஆட்சி செய்கிறது.அதுவே நமது பொருளாதாரக் கொள்கையின் அடிப்படை”,என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

4 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

4 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

7 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

7 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

8 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

9 hours ago