கடந்த மே 1 ஆம் தேதி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.2253 இல் இருந்து ரூ.102.50 உயர்த்தின.இதனால்,வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் தற்போது ரூ.2355.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல,5 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை தற்போது 655 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனையடுத்து,வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடைகொண்ட கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று ரூ.50 உயர்த்தின.இதனால்,சிலிண்டர் விலை ரூ.965 லிருந்து ரூ.1015 ஆக உயர்ந்துள்ளது.இது கடந்த ஆறு வாரங்களுக்குள் இரண்டாவது விலை உயர்வு ஆகும்.ஏற்கனவே பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில்,வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்,2014 ஆம் ஆண்டில் 2 சிலிண்டர் வாங்கும் அளவுக்கு பணம் இருந்த நிலையில்,தற்போது அதே அளவு பணம் 1 சிலிண்டர் வாங்குவதற்கு மட்டுமே போதுமானதாக உள்ளது என்று மத்திய அரசை கண்டித்து ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்.
இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:
2014 இல் காங்கிரஸ் ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.410 ஆக இருந்த நிலையில்,மானியம் ரூ.827 வழங்கப்பட்டது.ஆனால்,தற்போது (2022) பாஜக ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.999 ஆக உயர்ந்துள்ளது.ஆனால், சிலிண்டருக்கு மானியம் தரப்படுவதில்லை.இதனால்,காங்கிரஸ் ஆட்சியில் 2 சிலிண்டர்கள் வாங்குவதற்கான தொகை,தற்போது 1 சிலிண்டர் வாங்க மட்டுமே போதுமானதாக உள்ளது”,என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும்,ஏழை மற்றும் நடுத்தர இந்திய குடும்பங்களின் நலனுக்காக காங்கிரஸ் மட்டுமே ஆட்சி செய்கிறது.அதுவே நமது பொருளாதாரக் கொள்கையின் அடிப்படை”,என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…