இந்தியா

2 மாநில தேர்தல்… 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குப்பதிவு விவரம் இதோ..

Published by
murugan

மத்திய பிரதேசத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 230 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 114 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. 109 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. ஆனால் , ஆட்சி அமைத்த ஒன்றறை வருடத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பொதுச் செயலருமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் கூட்டாக ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்ததால் காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மை பலத்தை இழந்தது.

இதையடுத்து மத்திய பிரதேசத்தின் முதல்வராக பாஜகவை சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் 4-ஆவது முறையாக பதவியேற்றார்.  மத்திய பிரதேசத்தில் இன்று  230 தொகுதிகளுக்கும் தேர்தல் வாக்குப்பதிவானது மொத்தம் 64,626 வாக்குசாவடிகளில் நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவல் படி இந்த மாநிலத்தில் 230 தொகுதிகளிலும் 5.6 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் 230 தொகுதிகளுக்கும், சத்தீஷ்காரில் 2-ஆம் கட்டமாக  70 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி வரை நிலவரப்படி  5.71% வாக்குகளும், மத்தியப் பிரதேசத்தில் 11.13% வாக்குகளும் பதிவாகியுள்ளன. சத்தீஷ்காரில் கடந்த 7 ஆம் தேதி முதற்கட்டமாக  20 தொகுதிகளுக்கு  தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
murugan

Recent Posts

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

5 minutes ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

42 minutes ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

1 hour ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

2 hours ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

2 hours ago

போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!

இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…

2 hours ago