2020-ம் ஆண்டு மிகவும் சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும் என டாடா குழும தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அதிலும், தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில், பொருளாதார வீழ்ச்சி, பணிநீக்கங்கள் மற்றும் ஊதிய குறைப்பு, மாணவர்களின் கல்வி பாதிப்பு என பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, டாடா குழுமத்தின் தலைவரான, ரத்தன் டாடா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘ இந்த ஆண்டு அனைவருக்கும் ஏதோ ஒரு இடத்தில் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்றும், இணையதளத்தில் ஒருவருக்கொருவர் புண்படுத்தப்படுவதையும், ஒருவரையொருவர் வீழ்த்துவதையும் நான் காண்கின்றேன். இந்த நிலை மாற வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த ஆண்டு ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டும் என்றும், டாடா தனது ஆன்லைன் இருப்பு மட்டுப்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் இது அனைவருக்கும் பட்சபாதம் இல்லாமல், அனைவர்க்கும் ஆதரவின் இடமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் ஒருவரை பார்க்கும் போது, கருணை, அதிக புரிதல் மற்றும் பொறுமை அதிகம் தேவை.’ என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…