கோவா அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோக கோளாறால் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!

Published by
Rebekal

கோவா அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாவிட்டாலும் ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 26 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. குறிப்பாக இந்தியாவில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு தற்போது கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக பல்வேறு மாநில அரசுகளும் பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.

இதனையடுத்து கோவாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அதேபோல ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கோவாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கோவாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மருத்துவமனையில் 26 கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதிகாலை 2 மணியிலிருந்து 6 மணிக்குள் இந்த 26 கொரோனா நோயாளிகளும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அம்மாநிலத்தில் சுகாதாரத்துறை அதிகாரி பேசுகையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று அதிகாலையில் இருந்து காலை 6 மணி வரையில் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தது உண்மை எனவும், மருத்துவமனைகளில் ஆக்சிஜன்களுக்கான தட்டுப்பாடு இல்லை என்றாலும், சரியான நேரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உரிய இடங்களுக்கு போய் சேருவதில் ஏற்படும் பிரச்சினை காரணமாக தான் இந்த உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு! 

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

15 seconds ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

38 minutes ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

9 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

9 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

11 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

12 hours ago