புனேயில் 8 வயது சிறுமியை கொலை செய்ததாக 26 வயது இளைஞர் பிம்ப்ரி-சின்ச்வாட் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக சிறுமி காணாமல் போயுள்ளதாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் குழந்தையை தேடும் பணி நடைபெற்று வந்துள்ளது.
அப்போது யாரும் இல்லாத ஒரு விடுதியில் சடலமாக அந்த குழந்தை கண்டறியப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக பாபில் அகமது ரயீஸ் லஷ்கர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை உதவி ஆணையர் பிரசாந்த் அம்ருத்கர் கூறுகையில், சிறுமியயை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவில்லை.
ஆனால் உயிரிழந்த சிறுமி குற்றவாளிக்கு மிகவும் பழக்கமானவர் எனவும், பணத்திற்காக சிறுமியை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருந்தாலும் குற்றவாளிகளி இவர் தான் என்பதற்கு உறுதியான ஆதாரம் தங்களிடம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…