இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்காளதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 95 கிலோ போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளின் சர்வதேச எல்லைப்பகுதியில் வழக்கமான பாதுகாப்பு பணியில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்பொழுது வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் 3 பேர் நுழைந்துள்ளார். உடனடியாக அவர்களை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்பொழுது அவர்கள் 3 பேரும் வங்காளதேசத்தை சேர்ந்த கடத்தல் கும்பல் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அந்த கும்பலிடமிருந்து 95 கிலோ போதைப் பொருளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் வங்காளதேசத்தை சேர்ந்த 3 பேரையும் கைது செய்த எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை மாநில போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஜூலை 1, 2025 அன்று…
ஆந்திரா : 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையின்…
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…