படுக்கை பற்றாகுறை…! ராஜஸ்தானில் ஒரே படுக்கையில் 2-3 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை…!

Published by
லீனா

ராஜஸ்தானில், பார்மரில் உள்ள மருத்துவமனையில், படுக்கை பற்றாக்குறை காரணமாக, ஒரே படுக்கையில், 2-3 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிக தீவிரமாக கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில், 3.66 லட்சம் பேர் கொரோனாவா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,754 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில்,   அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. படுக்கைகள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை பல இடங்களில் நிலவுகிறது.

இந்நிலையில், ராஜஸ்தானில், பார்மரில் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் பற்றக்குறை நிலவுவதால், ஒரு படுக்கையில், 2-3 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். பார்மரில், 2,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து, அங்கு வசிப்பவர்களின் ஒருவர் கூறுகையில், மக்கள் நிலைமையின் தீவிரத்தை அறியாமல் கொரோனா கட்டுப்பாடுகளை மீறுகிறார்கள் என தெரிவித்துள்ளார். மேலும், பார்மரைச் சேர்ந்த டாக்டர் பி.எல். பிர்ஷோய் கூறுகையில், விரைவில் மாவட்டத்தில் கோவிட் பராமரிப்பு மையம் அமைக்கப்பட வேண்டும் என்றும், ஆக்ஸிஜன் மற்றும் பிற மருத்துவ வசதிகள் போன்ற மருத்துவ உள்கட்டமைப்புகளின் பற்றாக்குறை காணப்படுவதாகவும், கொரோனா நோயாளிகளை பரிசோதிக்கவும், கண்காணிக்கவும், சிகிச்சையளிக்கவும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றும்,  இதன் விளைவாக  ராஜஸ்தானில் கொரோனா வைரசால்பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதியதாக 17,921 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 159 பேர் உயிரிழந்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

இனிமே இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

இனிமே இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…

5 minutes ago

விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி! மத்திய அரசு எடுத்த முடிவு!

டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…

49 minutes ago

“விலங்குகள் தாக்குவது இயல்பு”…அலட்சியமாக பதில் சொன்ன ராஜகண்ணப்பன்.. எழுந்த கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…

1 hour ago

”ரயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும்” – ரயில்வே துறை இணை அமைச்சர்.!

சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…

2 hours ago

”கூமாப்பட்டி – பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்” – விருதுநகர் ஆட்சியர் உறுதி.!

விருதுநகர் : ஊட்டி, கொடைக்கானல் என பிரபல சுற்றுலாத் தலங்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டுத் திடீரென கூமாபட்டி கிராமம் வலைத்தளங்களில்…

2 hours ago

கூட்டணி ஆட்சி விவகாரம்: ‘அமித் ஷாவும், எடப்பாடியும் பேசி முடிவெடுப்பார்கள்’ – நயினார் நாகேந்திரன்.!

சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக…

2 hours ago