தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் ஒரே இரவில் நடந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகியோர் ஷோபியன் மாவட்டத்தின் சுகன் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது, பயங்கரவாதிகளுக்கு சரணடைய வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும், அவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால், ராணுவம் தரப்பிலும் பதிலுக்கு பதிலடி கொடுத்தது என்று ஒரு காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
மேலும், இருள் காரணமாக இந்த சண்டை நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். சிக்கி கொண்ட பயங்கரவாதிகள் தப்பிக்க சில முயற்சிகளை மேற்கொண்டனர் என்று கூறினார்.
பின்னர், மீண்டும் நேற்று அதிகாலை, துப்பாக்கிச் சூடு நடவடிக்கை தொடங்கியது. இந்த சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். என்று அந்த காவல்துறை அதிகாரி கூறினார்.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…