Indian Army Attacks[Image Source : Twitter/@ANI]
ஜம்முகாஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் எல்லையைக் கடக்க முயன்ற 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர்: பூஞ்ச் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் மற்றும் ஆயுதங்களுடன் எல்லைக் கட்டுப்பாட்டு வேலியை கடக்க முயன்ற 3 பயங்கரவாதிகள் கடக்க முயன்றுள்ளனர். சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை அறிந்த எல்லை பாதுகாப்புப் படையினர், துப்பாக்கியால் தாக்கியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு ராணுவ வீரர் மற்றும் பயங்கரவாதிகளில் ஒருவரும் காயமடைந்தனர். இதன்பின் 3 பயங்கரவாதிகளையும் இந்திய ராணுவப் படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கிகள், கைக்குண்டுகள் போன்ற ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் கர்மாராவைச் சேர்ந்த முகமது ஃபரூக், முகமது ரியாஸ் மற்றும் முகமது ஜுபைர் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். இதில் முகமது ஃபரூக் காலில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அப்பகுதியில் தேடுதல் பணி நடந்து வருகிறது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…
மதுரை : மதுரை வேலம்மாள் திடலில் இன்று (ஜூன் 8, 2025) மாலை 3 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…
சென்னை : கடந்த சில நாட்களாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே எழுந்த பிரச்சினை…
சென்னை : 2012-ல் இந்தியா A கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்தபோது, வீரர் செட்டேஷ்வர் புஜாராவுக்கு ஒரு…
சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் காட்சிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகிறது.…