புதுச்சேரியில் ஒரேநாளில் பரப்புரை மேற்கொள்ளும் 3 மத்திய அமைச்சர்கள்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரே நாளில் தனித்தனியாக 3 மத்திய அமைச்சர்கள் பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். அதன்படி, காலை 9:45 மணிக்கு புதுச்சேரி வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனியார் விடுதியில், காலை 10 மணிக்கு, புதுசாரி பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.
இதன்பின் விமானம் மூலம் காரைக்கால் செல்கிறார். அங்கு, 5 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். அதன்பின் மீண்டும் புதுச்சேரி வரும் அவர், கிழக்கு கடற்கரை சாலையில், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.
சென்னையில் இருந்து காரைக்காலுக்கு வரும் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், அர்ஜுன் ராம் மேக்வால் காரைக்காலில் உள்ள 11 மீனவ கிராமங்களில் உள்ள மீனவ மக்களை நேரடியாக சந்திக்கின்றனர். இதனை தொடர்ந்து புதுச்சேரி வரும் இவர்கள், மீனவ மக்களை சந்தித்து பரப்புரையில் ஈடுபட உள்ளனர்.
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…