ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு; 11 பேர் காயம்..!

Published by
murugan

குஜராத்தில் உள்ள ஒரு மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு; 11 பேர் காயம்

குஜராத் வதோதராவின் மகர்புரா மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் பாய்லர் இன்று காலை திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அதன் காரணமாக சுமார் அரை முதல் ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பாய்லர் அருகே தொழிலாளர்கள் வீடு கட்டியிருந்தனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பாய்லர் வெடித்ததில் ஒரு 30 வயதுடைய பெண் மற்றும் 4 வயது சிறுமி உட்பட  நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.

மகர்புரா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சஜித் பலோச் கூறுகையில், அப்பகுதியில் 9:30 மணியளவில் பலத்த வெடிப்பு ஏற்பட்டது. 15 பேர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 4 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் இங்கு பணிபுரியும் ஊழியர்களும், சம்பவம் நடந்தபோது  அவ்வழியாகச் சென்றவர்களும் அடங்குவார்கள் என தெரிவித்தார்.

தடயவியல் குழு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டு வருவதாக  கூறினார். மத்திய குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள ரசாயன நிறுவனத்தில் சமீபத்தில் நடந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

14 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

16 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

19 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

20 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

22 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

22 hours ago